
பட மூலாதாரம், Getty Images
1983ல் இந்தியா முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றபோது, அணியில் இருந்த அனைத்து பந்துவீச்சாளர்களும் ஆல்ரவுண்டர்களாக இருந்தனர். அவர்களில் பலர் ‘பிட்ஸ் அண்ட் பீஸ்’ கிரிக்கெட் வீரர்கள் என்று அறியப்பட்டனர். அதாவது கொஞ்சம் பந்துவீசவும், கொஞ்சம் பேட்டிங் செய்யவும் கூடியவர்கள்.
ஆனால், கேப்டன் கபில்தேவ் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருந்தார்.
அணியில் மதன்லால், ரோஜர் பின்னி, சந்தீப் பாட்டீல், மொஹிந்தர் அமர்நாத் மற்றும் இரண்டு நடுத்தர வேக ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளர்கள் பல்விந்தர் சந்து, சுனில் வால்சன் ஆகியோர் இருந்தனர். அந்த அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவி சாஸ்திரி மட்டுமே இறுதிப் போட்டியில் விளையாடவில்லை.
இந்தப் போட்டியில் இந்தியா 6 பந்துவீச்சாளர்களை களமிறக்கியது. பாட்டீல் கூட தேவைப்படவில்லை. மேலும் தொடக்க ஆட்டக்காரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்துக்கான தேவையும் இருக்கவில்லை. ஆனால் பின்னர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது பந்துவீச்சில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மதன் லால் அரையிறுதியிலும் இறுதிப் போட்டியிலும் தனது அசத்தலான மிதவேக பந்துவீச்சால் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
40 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட் சற்று வித்தியாசமானதாக இருந்தது. அப்போது விக்கெட் எடுப்பதில் யாரும் அதிக கவனம் செலுத்தவில்லை. ஆனால் காலப்போக்கில், ஒரு சில பேட்ஸ்மேன்களை அவுட் செய்வது முக்கியமானதாக மாறிப்போனது. அதனால்தான் ரன் கொடுக்காத பவுலர்களை விட விக்கெட் வீழ்த்துபவர்களின் தேவை அதிகரித்துள்ளது.

பட மூலாதாரம், AFP
சிராஜ் ஆசிய கோப்பை போட்டியிலும் நன்றாகவே விளையாடினார்.
2011 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வென்றது. சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், வீரேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா என முன்னணி பேட்ஸ்மேன்கள் பந்துவீசுவதில் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். மற்றபடி இறுதிப் போட்டியில் கோலியுடன் சச்சினும், யுவராஜும் மட்டுமே பந்து வீசினர்.
இந்தப் போட்டியில் மொத்தம் 12 பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களில் ஏழு பேர் நடுத்தர வேகப்பந்து வீச்சாளர்களாக இருந்தனர். அந்த தொடரில், பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷாகித் அப்ரிடியைப் போலவே இந்தியாவின் ஜாகீர் கான் 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணியில் ஜாகீர் கானைத் தவிர, எஸ்.ஸ்ரீசாந்த், முனாப் படேல், ஆஷிஷ் நெஹ்ரா, பிரவீன் குமார் போன்ற நடுத்தர வேகப்பந்து வீச்சாளர்களும், ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களும் இருந்தனர். இந்த ஆண்டைப் போலவே, அப்போதும் அவர்கள் வேகப்பந்துவீச்சில் கவனம் செலுத்தினர்.
1983 இன் ‘பிட்ஸ் அண்ட் பீஸ்’ கிரிக்கெட் வீரர்கள் ஒரு வகையில் 2023 இல் சிறப்பாக விளையாடுபவர்களுக்கு வழிகளை உருவாக்கியுள்ளர். இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் வரிசையில் முதல் பாதியில் ஒரு பந்துவீச்சாளர் கூட விளையாடவில்லை. ஆனால் பின் பாதியில் பந்துவீச்சாளர்கள் வருகிறார்கள். இந்நிலையில், அவர்களும் பேட்டிங் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது அவ்வளவு நல்லதாக இல்லை.
இது ஒருநாள் கிரிக்கெட்டின் இயல்புக்கு எதிரானது என்றே கூற வேண்டும். மற்றபடி எல்லா வீரர்களும் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று எப்போதும் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

பட மூலாதாரம், AFP
அனைத்து விதமான ஆடுகளங்களிலும் ஷமி சிறப்பாக விளையாண்டு வருகிறார்.
ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, ஷர்துல் தாகூர், ஹர்திக் பாண்டியா ஆகியோரின் வரிசை இந்திய அணியின் வேக பந்துவீச்சை காட்டுகிறது. குறிப்பாக சிறப்பாக பந்து வீசும் பும்ரா, முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு வந்துள்ளதால், வேகப்பந்துவீச்சு பலம் அதிகரித்துள்ளது என்று கருதலாம். இந்த முறை பும்ரா அணியில் முக்கிய பங்கு வகிப்பார்.
மேலும் ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் சிராஜ் தனது வீரதீர ஆட்டத்தால் அனைவரையும் முந்திச் சென்றார். மற்றபடி, மூன்றாவது நடுத்தர வேகப்பந்து வீச்சாளருக்காக ஷமி மற்றும் தாகூர் இடையே போட்டி நிலவுகிறது.
உலக கோப்பைக்கு (2011 போட்டி மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் நடைபெற்றது) எந்த வகையான விக்கெட்டுகளை தயார் செய்தாலும், முதன்மையாக வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று கருதுவது தவறு என்று சொல்ல முடியாது.
போட்டிகள் அடுத்தடுத்து நடக்கும் போது, ஆடுகளமும் அதற்கேற்றவாறு பங்களிக்கத் தொடங்குகிறது. இல்லை என்றால் இரண்டாவது முறை பந்து வீசும் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பனிப்பொழிவு தடையாகி விடும்.
போட்டிகள் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும். மாலையில் சூரிய ஒளி மறைவதற்குள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பந்தை ஸ்விங் செய்ய நேரம் கிடைக்கும். இருப்பினும், நிபந்தனைகளுக்கு ஏற்ப பந்து வீசுவது அவசியம். இந்திய அணிக்கு அந்த சக்தி உள்ளது.

பட மூலாதாரம், AFP
தற்போது குல்தீப் யாதவ் ஒருநாள் போட்டிகளில் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக வலம் வருகிறார்.
தற்போது குல்தீப் யாதவ் ஒருநாள் போட்டிகளில் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக வலம் வருகிறார். காயமடைந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேலுக்கு பதிலாக அஷ்வின் சிறந்த சுழற்பந்து வீச்சைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இவர்களுடன் ரவீந்திர ஜடேஜாவும் இணைவதால், மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி தனது ஆட்டத்தை வெளிப்படுத்தவுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் மார்க் வுட், கிறிஸ் ஓக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, சாம் குர்ரன் ஆகியோருடன் சிறந்த வேகமான செயல்திறன் மிக்க குழுவும் உள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட், பாட் கம்மின்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், கேமரூன் கிரீன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நசீம் ஷா காயமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தான் அணியில் சில மாற்றங்கள் தெரிகின்றன. இருப்பினும், ஷாஹீன் அப்ரிடி, ஹரிஸ் ரவுஃப், ஹசன் அலி மற்றும் முகமது வாசிம் ஆகியோரைக் கொண்ட வேகப்பந்து வீச்சுக் கூட்டணி சுவாரஸ்யமாகத் தெரிகிறது.
உலகக்கோப்பை போட்டிகளை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இடையேயான சண்டையாக பார்ப்பது ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். இதைப் பார்க்கும்போது, முதல் முறையாக உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணியில் படிப்படியாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மிகவும் சுவாரஸ்யமான மாற்றங்களாக உள்ளன.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்