சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “சமநிலை படுத்தவேண்டும் என்பதற்காகதான் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. தற்போதைய சூழலில், ஒரு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போதுதான் அவரவர்களுக்கு உரிய விகிதாசாரத்தில் பலன் கிடைக்கும் என அகில இந்திய அளவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு வெற்றிகரமாக நடக்கிறது. அதேபோன்று தமிழகத்திலும் நடத்த வேண்டும் என விரைவில் முதல்வருக்கு நாங்கள் வேண்டுகோள் விடுப்போம். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ரூ.500, ரூ.1,000 நோட்டு செல்லாது என்று சொன்னது போன்றதுதான்.


இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியம் இல்லாத ஒன்று. மோடி மிரட்டிப் பார்க்கிறார். தமிழ்நாடு, கேரளா மாநிலங்கள் அஞ்சாது. மீறி செயல்படுத்தினாலும், இப்போது பெற்றுள்ள வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்றுதான் மு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார். மாநிலங்களில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள அரசுகளை கேட்காமல் நாடு முழுவதும் ஒரு சட்டத்தை கொண்டு வரமுடியாது. இந்தியாவில் இருக்கும் 50 ஆயிரம் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களோடு கலந்து ஆலோசிக்க வேண்டும். மோடியும், அமித் ஷாவும் மட்டும் நினைத்து ஒன்றை நடைமுறைப்படுத்த முடியாது. அது தோற்கடிக்கப்படும்” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com