Scholarships For Students

கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கென உதவித்தொகையும் பல்வேறு திட்டங்களையும் தமிழக அரசு செய்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான IIT, IIM, NIT போன்ற மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிப்பை பயிலும் மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு, தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், உதவித்தொகை பெற விரும்புவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 1/2 லட்சத்துகுள் இருக்க வேண்டும். அத்தகைய மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரைக்கும் வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.
Also Read >> உங்ககிட்ட 2000 ரூபாய் நோட்டுகள் இருக்கா? அப்போ உடனே மாத்திடுங்க! ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு…!
இதற்கான விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையர் அலுவலகம் அல்லது என்ற இணையதளத்தின் வழியாக இந்த விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். பின்னர் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சமர்பிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அவர்கள் அறிவித்துள்ளார்.
நன்றி
Publisher: jobstamil.in