இந்த நிலையில், முன்னாள் பா.ஜ.க தலைவரும், ஜார்கண்ட் ஆளுநருமான சி.பி ராதாகிருஷ்ணன், “கேரளமும், தமிழ்நாடும் இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் பல்வேறு ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறது. துரதஷ்டவசமாக கேரள கம்யூனிஸ்ட் அரசாக இருக்கட்டும், தமிழ்நாட்டின் தி.மு.க-வாக இருக்கட்டும் இரண்டு அரசுகளும் தீவிரவாதிகளை ஆதரிப்பதுதான் இஸ்லாத்தை ஆதரிப்பது என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். வெடிகுண்டுகளை வைப்பவர்களை, கொலை செய்பவர்களைப் பாதுகாக்கும் அரசாகத்தான் இரண்டு அரசுகளும் இருக்கின்றன.

அதனால்தான் இதை களையெடுக்க முடியவில்லை. நிச்சியமாக ஒரு கிறிஸ்தவர், தன்னுடைய கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டு வைத்திருப்பார் என்பதை யாராலும் நம்ப முடியாது. எனவே, கேரள அரசு முனைப்புடன் செயல்பட்டு உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். என்.ஐ.ஏ இதில் தலையிட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற பேராபத்துகளிலிருந்து நம்மைப் பாதுகாக்க முடியும்” எனச் கருத்து தெரிவித்திருக்கிறார். இவரின் இந்த கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
