இந்த நிலையில், இந்த விவகாரத்துக்கு இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையில், இந்தியாவிலிருந்து 41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்றதாகக் கனடா தெரிவித்திருக்கிறது. இது குறித்து கனடா வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி,”இந்தியாவிலிருந்து எங்கள் நாட்டின் தூதரக அதிகாரிகளை பாதுகாப்பாக வெளியேற நாங்கள் வசதி செய்திருக்கிறோம். அவர்களது குடும்பத்தினரும் இப்போது வெளியேறிவிட்டனர்.


41 தூதர்களை ஒரே நேரத்தில் வெளியேற்றுவது இதுவே முதல்முறை. இந்த நடவடிக்கை இந்தியாவுக்குப் பதிலடி கொடுக்கும் திட்டமில்லை. இரு நாடுகளுக்கு மத்தியில் இருக்கும் நிலைமையை மோசமாகாமல் இருக்க மேற்கொள்ளப்பட்டது. கனடா சர்வதேச சட்டத்தைத் தொடர்ந்து பாதுகாக்கும். இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். இந்தியாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்போம்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com