அதில், ’27 நட்சத்திரத்தில் முதல் நட்சத்திரம், மூல நட்சத்திரம். ஆனி முத்தே என்னும் சொல்லாடல் இருக்கும். ஆனி மாதம் பிறக்கக்கூடிய முதல் மூலம் பற்றி, ஆனி முன் மூலம் அரசாளும் என்று கூறுவர். அதாவது,ஆனி மூலத்தின் முதல் பகுதி பெளர்ணமியை ஒட்டி இருக்கும். இதனால் சந்திரனின் சக்தி அப்போது பிறப்பவர்களுக்கு அதிகம் கிடைக்கும். ஆனி பிற்பகுதியில் பிறப்பவர்கள், அதாவது தேய்பிறையில் பிறப்பவர்களுக்கு சந்திரனின் ஆசி கிடைப்பதில்லை. இதனால், அப்போது பிறக்கும் பெண்கள், மூர்க்கத்தன்மையுடன் இருப்பர். குடும்பத்தில் அனுசரித்துச் செல்வது கடினம். ஆனால், இதுகாலப்போக்கில் மாற்றம் அடைந்து, மூலம் என்றால் நிர்மூலம் என்று கொண்டுவந்துவிட்டார்கள். அது முற்றிலும் தவறானது. ஆனிமூலத்தை ஆண்மூலம் என மாற்றிவிட்டனர். ஆனி பின் மூலத்தை பெண்மூலம் என மாற்றிவிட்டனர். மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, ஜாதக அமைப்புகள் சரியாக இருக்கும்பட்சத்தில் தாராளமாக திருமணம் செய்யலாம்.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com