ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
குஜராத் மாநிலம் பாவ் நகரைச் சேர்ந்த 23 வயதான கணேஷ் பரைய்யா, மருத்துவராக உள்ளார்.
உயரம் மூன்று அடி, ஆனால் கனவோ பெரிது – சோதனைகளைத் தாண்டி மருத்துவரான குஜராத் இளைஞர் – காணொளி
குஜராத் மாநிலம் பாவ் நகரைச் சேர்ந்த 23 வயதான கணேஷ் பரைய்யா, ஒரு மருத்துவர்.
அவரது உயரம் மூன்று அடி.
மிகக் குறைந்த உயரம் கொண்ட மருத்துவராக அவர் அறியப்படுகிறார்.
பாவ் நகர் மாவட்டத்தின் கோர்கி கிராமத்தில் விவசாய தொழிலாளிகள் குடும்பத்தைச் சேர்ந்த கணேஷுக்கு ஏழு சகோதரிகள் உள்ளனர். உயரம் குறைவாக இருப்பதால் அவரை பள்ளி நாட்களில் பலரும் கேலி செய்துள்ளனர்.
அதேநேரம், கணேஷுக்கு உதவியவர்களின் பட்டியலும் நீளமானது. பாவ் நகர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்த கணேஷ், தற்போது மருத்துவப் பயிற்சி பெற்று வருகிறார்.
உயரம் குறைவாக இருந்தாலும் வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க வேண்டும் எனக் கனவு கொண்டிருந்தார் கணேஷ். மருத்துவர் ஆவதற்கான அவரது பயணம் எளிதானது அல்ல. இருந்தாலும், அவர் தன் கனவை நனவாக்க முடிவு செய்தார்.
ஆனால் அதற்கு அவர் பல போராட்டங்களைக் கடந்து வர வேண்டி இருந்தது.
இந்தியா மட்டுமல்லாமல் உலகிலேயே 3 அடி உயரம் கொண்ட மருத்துவராக கணேஷ் கருதப்படுகிறார்.
இந்த சாதனைகளுக்காகப் பல்வேறு பாராட்டுகளையும் அவர் பெற்றிருக்கிறார். செப்டம்பர் 2023-ஆம் ஆண்டு, தைவான் அதிபரால் அவர் கௌரவிக்கப்பட்டார். வெவ்வேறு திட்டங்களில் குஜராத் அரசும் கணேஷை கௌரவித்துள்ளது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்