
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா முடிவுக்கு வந்திருக்கிறது. தொடக்கம் முதலே வெற்றிமேல் வெற்றிகளை குவித்து தோற்டிக்கவே முடியாத அணியாக வலம் வந்த இந்திய அணி 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதே ஆஸ்திரேலிய அணியிடம் இறுதிப்போட்டியில் மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அந்த அணியை வெற்றிக்கோட்டிற்கு அழைத்துச் சென்றார். அந்த தருணத்தில் போட்டி நடைபெற்ற ஆமதாபாத் நரேந்திரே மோதி ஸ்டேடியம் எப்படி இருந்தது? களத்தில் வீரர்களும், களத்திற்கு வெளியே போட்டியை நேரில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களும் என்ன செய்தனர்? கேமராவில் உறைந்த அந்த தருணங்களை பார்க்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
241 இலக்கை எட்டியதும் பெவிலியனில் இருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் மகிழ்ச்சியுடன் துள்ளிக்குதித்து உள்ளே ஓடி வருகிறார்கள். அங்கே சோகத்துடன் இந்திய விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல்

பட மூலாதாரம், Getty Images
சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள்

பட மூலாதாரம், Getty Images
இறுதிப்போட்டியில் கோட்டை விட்ட சோகத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா

பட மூலாதாரம், Getty Images
தோல்வியுற்ற விரக்தியில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images
தோல்வி தந்த வலியுடன் இந்திய வீரர்கள்

பட மூலாதாரம், Getty Images
மைதானத்திற்கே சென்று இறுதிப்போட்டியை நேரில் பார்த்த இந்திய பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images
இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியுற்ற விரக்தியில் அந்த அணி ரசிகர்

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணியின் தோல்வியை காண சகிக்காத ரசிகர் ஒருவர்

பட மூலாதாரம், Getty Images
மைதானத்தில் சோகமே உருவாக இந்திய அணியின் ரசிகை

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணியின் தோல்வியை காண சகிக்காத ரசிகர் ஒருவர்
நன்றி
Publisher: பிபிசிதமிழ்