உலகக்கோப்பை: தொடர்ந்து வெற்றிபெறும் இந்திய அணியின் அந்த 2 பலவீனங்கள் என்னென்ன?

உலகக்கோப்பை: தொடர்ந்து வெற்றிபெறும் இந்திய அணியின் அந்த 2 பலவீனங்கள் என்னென்ன?

இந்திய அணி

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

லீக்கில் இரண்டாவது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்காவை இந்தியா 243 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது

விராட் கோலி மீதான எதிர்பார்ப்பே உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய ரசிகர்களின் ஆர்வத்தை அதிகளவில் தூண்டி வருகிறது.

முதலில், இந்தியாவின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி 49 சதங்கள் பெற்று சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்வாரா? என எதிர்பார்த்து வந்தனர். இப்போது அவர் 50க்கு வருவாரா? என எதிர்பார்க்கின்றனர். பின், 51 பற்றி எதிர்பார்க்க ஆரம்பிப்பார்கள். இந்த எதிர்பார்ப்புகள் தொடந்து கொண்டே இருக்கும்.

அவரின் புள்ளிவிவரங்கள் ரசிகர்களின் மனதைக் கவரும். ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய பேட்டர்கள் சதம் அடித்தவர்களில் முதல் இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். கேப்டன் ரோஹித் சர்மா 31 சதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை, லீக்கில் இரண்டாவது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்காவை இந்தியா 243 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. தென்னாப்பிரிக்கா அணி வெறும் 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

உண்மையில் இந்தியாவிற்கும் மற்ற அணிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? அவர்களால் இன்னும் இரண்டு முறை இதுபோன்ற வெற்றியை சாத்தியப்படுத்த முடியுமா?

இந்திய அணியின் சிறப்பு என்ன?

இந்திய அணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இதற்கு முன் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்தியா இதுவரை ஆதிக்கம் செலுத்தியதில்லை

கோலி மீதான ரசிகர்களின் ஆர்வம் மற்ற ஆட்டக்கார்களைப் பற்றிய புள்ளி விபரங்களை பின்னுக்குத் தள்ளியிருக்கலாம். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் 15 விக்கெட்டுகள், 15 என்ற சராசரியுடன் வந்துள்ளன; அவரது 70% பந்துகளில் ரன்களை எடுக்க முடியவில்லை.

பவர்பிளேயில் (முதல் 10 ஓவர்கள்), டாட் பால்களின் சதவீதம் – ரன் இல்லாமல் வீசப்பட்ட பந்துகள் – 83 ஆக உயர்கிறது. விக்கெட்டுகளை வீழ்த்துவது, ரன்களைக் குறைப்பதும் தான் ஒரு பந்து வீச்சாளரின் கனவாக இருக்கும். தொடக்கம் முதலே எதிரணிக்கு அழுத்தம் கொடுக்கிறார், பும்ரா.

அவரது கேப்டன் ரோஹித் ஷர்மாவும் அதையே பேட்டிங்கில் செய்து வருகிறார். அவர்களது உத்தி நன்றாக வேலை செய்கிறது. பவர்பிளேயில் இந்தியா 91 ரன்கள் எடுத்து, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டது.

சர்மா 24 பந்துகளில் 40 ரன்கள் மட்டுமே எடுத்தார், ஆனால் ஆறாவது ஓவரில் அவரது அணி 60 ரன்களைக் கடந்தது, இதனால் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் 134 ரன்களைச் சேர்க்க நேரம் கொடுத்தனர். ஷர்மா மற்றும் ஷுமான் கில், மார்கோ ஜான்சனைத் தேர்ந்தெடுத்தனர். அதுவரை மார்கோ ஜான்சன் பவர்பிளேயில் மிகவும் வெற்றிகரமான பந்துவீச்சாளராக இருந்தார்.

ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் இந்த வியூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர், அதே சமயம் இந்திய டாப் ஆர்டர் அதை நிறைவேற்றியதற்காக பாராட்டுக்கு தகுதியானது. இது இந்தியாவின் கனவு அணி.

இதற்கு முன் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்தியா இதுவரை ஆதிக்கம் செலுத்தியதில்லை. ஏன், எந்தப்போட்டியிலும் இந்த அளவு ஆதிக்கம் செலுத்தியதே இல்லை. அணியின் ஒவ்வொரு பிரிவிலும்- ஸ்பின்னர்கள், தொடக்க ஆட்டக்காரர்கள், மிடில் ஆர்டர் பேட்டர்கள், என அனைவரும் அசாதரணமாக நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் செயல்பட்டனர். சதங்கள், ஐந்து விக்கெட்டுக்கள், சிறந்த விக்கெட் கீப்பிங், அபாரமான கேட்சுகளும் இந்திய அணியின் ஆட்டத்தில் வெளிப்பட்டது.

உலகக் கோப்பையில் இந்தியாவின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு அணி – பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் – மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களான இடது கை வீரர்கள், ஒரு விரல் சுழற்பந்து வீச்சாளர் (ரவீந்திர ஜடேஜா) மற்றும் ஒரு மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் (குல்தீப் யாதவ்) ஆகியோருடன் நன்றாக இணைந்திருக்கிறது. சொந்த மண்ணில் விளையாடும் உலகக் கோப்பையில் இதற்கு மேல் ஒரு அணியிடம் கேட்க முடியாது.

உலகக்கோப்பையில் நெருக்கடியான ஆட்டத்தை காணாத இந்தியா

இந்திய அணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக ஒரு ஆல்-ரவுண்டரை இந்தியாவால் கண்டுபிடிக்க முடியவில்லை

இந்திய அணி மும்பையில் அரையிறுதிக்கு காத்திருக்கும் இந்தத் தருணத்தில், கவலைக்குரிய இரண்டு அம்சங்கள் இந்திய அணியில் இருக்கின்றன. உள்ளன: இந்தியா ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே கொண்டு விளையாடுகிறது. ஏதேனும் காயம் ஏற்பட்டால் உருவாகும் திடீர் நெருக்கடியை சமாளிப்பதற்கான உறுதியான திட்டம் இல்லை.

எனினும், இது ஒரு தனித்துவமான பந்துவீச்சாளர்களின் கலவையான அணிதான். பந்துவீச்சாளர்களில் யாரும் தங்களது வேலை ரன்களை குறைத்து வைத்திருப்பது மட்டும்தான் என எண்ணவில்லை. உங்களிடம் இதுபோன்ற ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது, அவர்களில் ஒருவர் இல்லாவிட்டாலும் அணி சிரமப்படுமோ என பெருமளவு கவலைக் கொள்ளத் தேவையில்லை என்பதும் ஒருவகையில் உண்மைதான்.

இந்திய அணியின் பேட்டிங் வரிசை பெரும்பாலும் நெருக்கடியான தருணங்களில் பரிசோதிக்கப்படவில்லை என்பது மற்றொரு அம்சம்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தை தவிர, ஆரம்பத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து தள்ளப்பட்டதை தவிர, பேட்டிங் எப்போதும் அழுத்தத்தில் இருக்கவில்லை. கோலியின் முடிவு நெருங்கிவிட்டது என்று சமீபகாலமாக உரக்கச் சொன்னவர்கள் இப்போது அவரது அடுத்த சதத்தை எதிர்பார்த்து ஆரவாரம் செய்கின்றனர்.

காயத்தில் இருந்து திரும்பியவர்கள் நேர்த்தியாக அணியில் பொருத்திக்கொண்டிருப்பதன் மகிழ்ச்சியை இந்தியா அனுபவித்து வருகிறது. அதே போல் விளையாடாமல் இருந்தவர்கள் தங்கள் பார்ம்-ஐ(Form) நிரூபித்து வருகின்றனர்.

ஷமி, முதல் நான்கு ஆட்டங்களில் அணியில் சேர்க்கப்படவில்லை. ஆனால் அதன் பிறகு16 விக்கெட்டுகளை சராசரி ஏழு என்ற கணக்கில் எடுத்துள்ளார். தனது இடம் கிடைக்காமல் தவித்த ஸ்ரேயாஸ் ஐயர், 4வது இடத்தில் ஆட வைக்கப்படுகிறார்.

ஆயினும் ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக ஒரு ஆல்-ரவுண்டரை இந்தியாவால் கண்டுபிடிக்க முடியவில்லை, அவரது கணுக்கால் காயம் உலகக் கோப்பையை முடிவுக்குக் கொண்டுவந்தது, இது இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட்டைப் பற்றி ஏதோ கூறுகிறது. ஆனால் அந்த விவாதம் இந்த உலகக்கோப்பை போட்டி முடியும் வரை காத்திருக்கலாம்.

இந்திய அணி

பட மூலாதாரம், Getty Images

நாக்-அவுட் சுற்று வரையிலும் உலகக்கோப்பை ஒரு குழு விளையாட்டு. ஆனால், இறுதியில் ஒரேயொருவரின் ஆட்டம்கூட மொத்த அணியின் கனவையும் முடிவுக்கு கொண்டுவரலாம்.

2003 உலகக் கோப்பையில், தொடர்ச்சியாக எட்டு ஆட்டங்களில் வெற்றி பெற்ற பிறகு, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்தித்தது இந்தியா. ரிக்கி பாண்டிங் 121 பந்துகளில் 8 சிக்ஸர்கள் உட்பட 140 ரன்கள் எடுத்தார்.

அத்தகைய ஊக்கமளிக்கும் ஆட்டத்திற்கு எதிராக நீங்கள் திட்டமிட முடியாது, அவரே அவுட் ஆக வேண்டும் என்று பிரார்த்தனைதான் செய்ய முடியும்.

இது மைக் டைசனின் புகழ்பெற்ற சொற்றொடர்: “ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டம் இருக்கும்; அவர்கள் தாக்கப்படும்வரை.”

டிராவிட் சமீபத்தில் கூறியது போல்: “நாம் நமது திறமைகளை தொடர்ந்து செயல்படுத்தி, யாராவது நம்மை விஞ்சி, நம்மை வீழ்த்தினால், நல்ல விஷயம். நாம் அவர்களின் கையை குலுக்கி விட்டு வெளியேறுவோம்.”

சுரேஷ் மேனன் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிஷன் பேடி குறித்து புத்தகங்கள் எழுதியுள்ளார்

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *