ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
லெப்டோஸ்பிரோசிஸ் நோய்க்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும் பூட்ஸை தயாரித்துள்ளது சூரத்தைச் சேர்ந்த நிறுவனம்
லெப்டோஸ்பிரோசிஸ் நோயில் இருந்து பாதுகாக்க பூட்ஸ்
பண்ணையில் தேங்கியுள்ள தண்ணீரில் கால்நடைகளின் கழிவுகள் கலந்த பிறகு லெப்டோஸ்பிரோசிஸ் பாக்டீரியா உருவாகிறது. ஒரு விவசாயி அல்லது தொழிலாளி அசுத்தமான தண்ணீரில் வேலை செய்யும் போது, வெட்டுகள் மற்றும் காயங்கள் மூலம் வைரஸ் அவர்களது உடலில் நுழைகிறது.
சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது ஒரு நபரின் மரணத்திற்கு வழிவகுக்கும். ஆனால் மந்திரா (மனிதனால் உருவாக்கப்பட்ட ஜவுரி ஆராய்ச்சி சங்கம்- MANTRA) உருவாக்கிய பூட்ஸ் லெப்டோஸ்பிரோசிஸ் நோயால் ஏற்படும் உயிர் இழப்புகளைத் தடுக்கலாம்.

மந்திரா என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் சான்றளிக்கப்பட்ட ஒரு ஆராய்ச்சி மையமாகும். இது சூரத்தில் 1981 முதல் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் முதன்முறையாக இதுபோன்ற பாதுகாப்பு காலணி உருவாக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்