
திண்டுக்கல் அருகே அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
இன்று (வெள்ளிக்கிழமை, டிசம்பர் 1) திண்டுக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புதுறை எஸ்.பி. சரவணன் தலைமையில் டி.எஸ்.பி நாகராஜன் இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி ஆகியோர் செட்டிநாயக்கன்பட்டி அருகே வந்த ஒரு காரை நிறுத்திச் சோதனை செய்தனர்.
அப்பொழுது காரில் இருந்தவர் நாக்பூரைச் சேர்ந்த அங்கீத் திவாரி எனத்தெரிய வந்தது.
அவரது வாகனத்தை செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று காரின் உள்ளே சோதனையிட்டபோது ரூ.20 லட்சம் பணம் இருந்தது என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும் அவரையும் அவரது வாகனத்தையும் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்திற்குச் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அங்கீத் திவாரி நாக்பூரில் பணியாற்றி வந்த நிலையில் 4 மாதம் முன் இவர் மதுரை மண்டலத்தில் அமலாக்கத்துறை அலுவலராக இடமாற்றம் பெற்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
பின்னர், லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யபட்ட அமலாகத் துறை அதிகாரி அங்கீத் திவாரி திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மோகனா இல்லத்தில் ஆஜர் செய்யப்பட்டர்.
அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அங்கீத் திவாரி
காவல்துறையினர் சொன்னது என்ன?
திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் கோரிக்கைக்கு ஏற்ப காவல் துறையினர் காவல் அதிகாரிகளை அனுப்பியதாகவும், லஞ்ச பெற்ற குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை அதிகாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர் என்பதையும் திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தொலைபேசி வாயிலாக பிபிசி தமிழுக்கு உறுதி செய்தார்.

இடையபட்டியில் உள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் 50-க்கும் மேற்பட்டோர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
அமலாக்க துறை அலுவலகத்தில் சோதனை, பரபரப்பு
இதையடுத்து மதுரை அமலாக்கத்துறை உதவி மண்டல அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் சோதனை நடத்த முற்பட்டனர்.
அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் இல்லாதபொது உள்ளே லஞ்ச ஒழிப்புத்துறை நுழைந்து சோதனை செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.
இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கும் அமலாக்க துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர், கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரியின் அறையில் மட்டும் சோதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இதனிடையே இடையபட்டியில் உள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் 50-க்கும் மேற்பட்டோர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அங்கு ஒரு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்