ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
திருநங்கையான இவர் நடனம் மூலம் புகழை எட்டியது எப்படி?
மும்பையில் பிச்சை எடுத்த திருநங்கை நடனக் கலைஞராக புகழ் பெற்றது எப்படி?
மும்பையைச் சேர்ந்த திருநங்கையான குஷி கேஷ் நடனக் கலைஞராக உள்ளார். நடனத்தின் மூலம் மக்களிடம் புகழ் அடைந்துள்ள அவர், தனது கடந்த காலத்தை நினைத்துப் பார்க்க விரும்பவில்லை என்று கூறுகிறார்.
மும்பையில் பேருந்து நிலையத்தில் பிச்சையெடுத்து வாழ்க்கையை நடத்திவந்த அவர் நடன கலைஞராக மாறியது எப்படி?
தன் வாழ்க்கையை மாற்றிய அந்த தருணம் குறித்து அவர் கூறும்போது “பாரத்நகர் பஸ் ஸ்டாப்பில் பிச்சையெடுத்துகொண்டிருந்தபோது மழை பெய்ய தொடங்கியது. என் உடைகள் முழுவதும் நனைத்து குளிரில் நடுங்கினேன். சாலையில் ஏராளமானோர் சென்றுகொண்டிருந்தாலும் ஒரு மனிதர் அங்கு செத்துக் கொண்டிருக்கிறார் என்று யாருமே நினைக்கவில்லை.
அப்போது அந்த வழியாக ஒரு ரிக்ஷா சென்றது. அதில் என் குரு சல்மா உட்கார்ந்திருந்தார். அவரிடம் சென்று நாளை உங்களைச் சந்திக்க மீண்டும் வரலாமா என்று கேட்டேன்.
ஆனால், அவரோ உன் பெற்றோர் என் வீட்டில் வந்து சண்டை இடுவார்கள் என்று கூறி மறுத்துவிட்டார்.
8 நாட்களுக்கு பிறகு அவர் என்னை மீண்டும் அழைத்துக்கொண்டார்” என்றார். (முழு தகவல் காணொளியில்)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்