உலகக்கோப்பை கிரிக்கெட்: வீரர்கள் உணவில் மாட்டிறைச்சி இல்லை – பாகிஸ்தான் அணியின் மெனு என்ன?

உலகக்கோப்பை கிரிக்கெட்: வீரர்கள் உணவில் மாட்டிறைச்சி இல்லை - பாகிஸ்தான் அணியின் மெனு என்ன?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

பட மூலாதாரம், THINKSTOCK

படக்குறிப்பு,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினருக்காக ஊட்டச்சத்து மிக்க பல்வேறு உணவுகள் அடங்கிய மெனு தயாரிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் 27 அன்று மாலை இந்திய மண்ணில் தரையிறங்கிய போது, ​​அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனால் அந்த அணி நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது.

ரிஸ்வான் அகமதுவின் சதம் மற்றும் பாபர் அசாம், சவுத் ஷகீல் ஆகியோரின் அரைசதங்கள் அடங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 345 ரன்களை எடுத்தது.

ரோச்சின் ரவீந்தர், கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன் ஆகியோரின் அரைசதங்களால் நியூசிலாந்து 44வது ஓவரில் இலக்கை எளிதாக அடைந்தது.

எனினும், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான பயிற்சி ஆட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவாகி வரும் நிலையில், இரண்டு நாட்களாக பாகிஸ்தான் அணிக்குக் கிடைத்த வரவேற்பு மற்றும் உணவு குறித்த பேச்சுக்களும் இடம்பெற்று வருகின்றன.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து ட்வீட் செய்து, இந்தியாவில் பாகிஸ்தான் அணிக்கு என்ன கிடைக்கும் என்று கூறியுள்ளது.

மெனுவில் என்ன உணவுகள் உள்ளன?

உலகக்கோப்பைக்காக இந்தியா வரும் எந்த அணிக்கும் மாட்டிறைச்சி வழங்கப்படுவதில்லை.

பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா கூறியுள்ளபடி, மாட்டிறைச்சி இல்லாத நிலையில் அனைத்து அணிகளுக்கும் வித்தியாசமான மெனு தயாரிக்கப்பட்டுள்ளது.

“கோழி, ஆட்டிறைச்சி மற்றும் மீன்கள் போன்ற உணவுகளுடன் பாகிஸ்தான் அணி, தனது வீரர்களுக்காக அவர்களின் தினசரி புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாறுபட்ட மெனுவை உருவாக்கியுள்ளது.”

சுவை மிகுந்த வேறுவேறு உணவுகளும் கிரிக்கெட் வீரர்களுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஜூஸ் போல நன்கு வேக வைக்கப்பட்ட ஆட்டுக்குட்டி இறைச்சி சாப்ஸ், மணம் மிக்க மற்றும் சுவையான மட்டன் கறி, அனைவருக்கும் விருப்பமான பட்டர் சிக்கன் மற்றும் அத்தியாவசிய புரத சத்துக்காக வறுக்கப்பட்ட மீன் போன்றவை இதில் அடங்கும்.

பாகிஸ்தான் அணிக்கான மெனுவில் வேக வைத்த பாஸ்மதி அரிசியும் சேர்க்கப்பட்டுள்ளதாக பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின் செய்தி அறிக்கை கூறுகிறது. ஒரு வேளை வீரர்கள் இலகுவான உணவை விரும்பினால், அவர்களுக்கு சாதாரணமான, காய்கறிகள் அடங்கிய புலவ் கிடைக்கும்.

இதுதவிர ஹைதராபாத்தில் பிரபலமாக விளங்கும் பிரியாணியும் வீரர்களுக்கு அவ்வப்போது கிடைக்கும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கிரிக்கெட் விளையாட இந்தியா வரும் வெளிநாட்டு அணியினருக்கு பொதுவாக மாட்டிறைச்சி அளிக்கப்படுவதில்லை.

இந்தியாவில் பசு புனிதமாக கருதப்படுகிறது. எனவே, நாட்டின் பல பகுதிகளில் பசுக்களைக் கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சில பகுதிகளில் இது பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

ஹைதராபாத்தில் பாகிஸ்தான் அணியின் மெனுவை விமர்சித்து, மாஸ்டர் விஜேஎன் என்ற பயனர் தனது சமூக வலைதளப் பதிவில், ‘இந்த நாட்டின் கலாச்சாரத்தின் பெரும்பகுதி மாட்டிறைச்சி உண்பது தான். மாட்டிறைச்சி இன்னும் இந்தியாவில் இருந்து மிகப்பெரிய அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதுடன், இந்தியாவிலும் உண்ணப்படுகிறது. அதை கிரிக்கெட் வீரர்களின் மெனுவில் இருந்து நீக்குவது பாதுகாப்பின்மையின் உச்சம்,’ என எழுதியுள்ளார்.

உலகக்கோப்பை மெனு என்ன?

பட மூலாதாரம், X/Farid Khan

இதற்குப் பதிலளித்த மற்றொரு பயனர், ‘இந்த வாதத்தின், நீங்கள் கேரளாவுக்குச் செல்லும்போது, ​​அங்குள்ள கலாச்சாரத்தைப் பொறுத்து பராத்தா, மாட்டிறைச்சி சாப்பிடுங்கள்’ என்று எழுதினார்.

இதற்குப் பதிலளித்த வேறு ஒரு பயனர், இது கேரளாவுக்கு மட்டுமல்ல, தென்னிந்தியா முழுவதும் உண்மையாகத் தெரிகிறது என்று எழுதினார்.

ஆனால் பத்திரிகையாளர் ஃபரித் கான், ‘இந்தியாவில் உலகக் கோப்பை போட்டியின் போது மாட்டிறைச்சி வழங்கப்படவில்லை என்றால், அதில் எந்த நகைச்சுவையும் இல்லை. இது பாகிஸ்தான் அணிக்கு மட்டுமல்ல அனைத்து அணிகளுக்கும் பொருந்தும்,’ என எழுதினார்.

உலகக்கோப்பை மெனு என்ன?

பட மூலாதாரம், X/Master VJN

அன்ஷ்மான் சிங் என்ற இந்தியப் பயனர், ‘பாகிஸ்தான் அணிக்கான உணவு மெனுவை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் அவர்களது சொந்த ஊட்டச்சத்து நிபுணர் இருப்பார் என்று நான் நம்புகிறேன். விருந்தினரின் கோரிக்கைக்கு இடமளிக்க ஹோட்டல் உரிமையாளர்கள் முயற்சி செய்வார்கள் என்று நான் நம்புகிறேன்,’ என எழுதியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதன்முறையாக இந்தியா வந்துள்ளது என்பதும், இரண்டு வீரர்களைத் தவிர மற்ற வீரர்கள் முதல் முறையாக இந்தியா வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணி இப்போது தனது அடுத்த பயிற்சி ஆட்டத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அக்டோபர் 3 ஆம் தேதி விளையாடுகிறது. அதே நேரத்தில் அவர்கள் தனது முதல் உலகக் கோப்பை போட்டியை அக்டோபர் 6 ஆம் தேதி நெதர்லாந்திற்கு எதிராக விளையாடுகிறார்கள். அவர்களது இரண்டாவது போட்டியும் அக்டோபர் 10 ஆம் தேதி இலங்கைக்கு எதிராக ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.

அக்டோபர் 14-ம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டிக்காக பாகிஸ்தான் அணி ஹைதராபாத்தில் இருந்து அகமதாபாத் செல்கிறது. இதுவரை இரண்டு வார காலம் கலாச்சாரம் மற்றும் உணவு வகைகளுக்கும் பெயர் பெற்ற ஹைதராபாத்தில் பாகிஸ்தான் அணியினர் இருப்பார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *