பிரேக்கிங் நியூஸ்
வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாஜக ஆலோசனை கூட்டம் மாநிலத்தலைவர் அண்ணாமல் இல்லாத நிலையில் இன்று சென்னையில் நடைபெற உள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.
Tue, 03 Oct 202305:22 AM IST
கடலூரில் பிளஸ்2 மாணவர் படுகொலை
கடலூர் அருகே ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த பிளஸ் 2 மாணவன் 8 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tue, 03 Oct 202305:04 AM IST
பேருந்தைச் சேதப்படுத்தி, காவலர்களைத் தாக்கிய 9 பேர் மீது கைது!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேற்று பேருந்தைச் சேதப்படுத்தி, காவலர்களைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்ட திராவிட தமிழர் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் (40) உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 10 பிரிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது
அனுமதி இன்றி சாலை மறியலில் ஈடுபட்ட அருந்ததிய சமுதாய மக்கள் 140 பேர் மீது 140, 341, 290 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tue, 03 Oct 202304:56 AM IST
ஆயுள் தண்டனை கைதி தற்கொலை
சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி மப்பேடு கஜா என்கிற கஜேந்திரன் (63) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மறைமலை நகரில் நடந்த கொலை வழக்கில், 2009ம் ஆண்டு டிசம்பர் 22 முதல் கஜேந்திரன் புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வந்துள்ளார்.
Tue, 03 Oct 202304:39 AM IST
அண்ணாமலை இல்லாமல் ஆலோசனை கூட்டம்!
வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாஜக ஆலோசனை கூட்டம் மாநிலத்தலைவர் அண்ணாமல் இல்லாத நிலையில் இன்று சென்னையில் நடைபெற உள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.
Tue, 03 Oct 202304:33 AM IST
தங்கம் வெள்ளி விலை நிலவரம்!
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று (அக்.03) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.528 குறைந்து, ரூ.42,320-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.66 குறைந்து ரூ.5290-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
ஒரு கிராம் வெள்ளி விலை இன்று (அக்.3) ரூ.2 குறைந்து ரூ.73.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.500 குறைந்து ரூ.73,500-க்கு விற்பனையாகிறது
Tue, 03 Oct 202304:31 AM IST
முதல்வர் தலைமையில் அதிகாரிகள் உடனான 2 நாள் ஆலோசனை மாநாடு!
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அதிகாரிகள் உடனான 2 நாள் ஆலோசனை மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைதியை நிலை நாட்ட உரிய நடவடிக்க எடுக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தினார்.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com