Tirupati Devotees Chennai Tirupati Train Service Cancelled

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினந்தோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவடங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருகிறார்கள். பக்தர்களின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதிக்கு தினமும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை – திருப்பதி இடையே இயக்கப்படும் ரயில்கள் 15 நாட்களுக்கு ரத்து செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…
ரேணிகுண்டா பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறும் காரணத்தினால் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் மாதம் 12 தேதிகள் வரை இந்த வழித்தடத்தில் இயக்கப்பட கூடிய ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
Also Read >> வேலை இல்லாம கஷ்டப்படுறீங்களா? தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு! மானியத்துடன் கடன் தருதாம் தமிழக அரசு!
அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் காலை 6.25 மணி அளவில் புறப்படும் சப்தகிரி விரைவு ரயில், பிற்பகல் 2.15 மணி அளவில் புறப்படும் திருப்பதி விரைவு ரயில், மாலை 4.35 மணி அளவில் புறப்படும் கருடாத்திரி விரைவு ரயில் வருகின்ற செப்டம்பர் மாதம் 28 (நாளை) முதல் அக்டோபர் மாதம் 12ம் தேதி வரை முழுவதும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
இதே போல, மறு மார்க்கத்தில் திருப்பதியில் இருந்து காலை 6.25 மணி அளவில் புறப்படும் கருடாத்திரி எக்ஸ்பிரஸ் ரயில், காலை 10.10 மணி அளவில் புறப்படும் சென்னை சென்ட்ரல் ரயில், மற்றும் மாலை 6.05 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில் ஆகியவை முழுவதுமாக ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in