சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து. இவர் கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சமீபத்தில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற ’ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார்.
எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பி-யில் சக்கைப்போடு போட்டு வருவதற்கு மாரிமுத்துவின் கதாபாத்திரம் முக்கிய காரணம். அதுமட்டுமின்றி குணசேகரனாக இவரின் நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. எதிர்நீச்சல் சீரியலில் இவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் மீம் டெம்பிளேட்டுகளாக சக்கைப்போடு போட்டன. அதிலும் இந்தாம்மா ஏய் என்கிற டயலாக் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் ஆகியது.
இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான இவர் (56) மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். இவரின் திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவரது மரணத்திற்கு சினிமா பிரபலஙளும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நன்றி
Publisher: 1newsnation.com