பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையைக் காரணம்காட்டி, பா.ஜ.க உடனான கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறது அ.தி.மு.க. இந்த விவகாரத்தில் எந்தவிதக் கருத்தையும் தெரிவிக்காமல், மெளனம் காக்கிறது பா.ஜ.க. இந்த நிலையில், கூட்டணி விவகாரங்கள் குறித்து தேசியத் தலைமையுடன் ஆலோசிக்கவும், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து முடிவெடுக்கவும், தேசியத் தலைமையின் அழைப்பின்பேரில், அண்ணாமலை டெல்லிக்குச் சென்றிருக்கிறார். அண்ணாமலையின் இந்த டெல்லி விஜயம், அ.தி.மு.க-பா.ஜ.க முகாம்களில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அண்ணாமலை சென்னைக்கு என்ன முடிவுடன் திரும்பப் போகிறார் என்ற கேள்வி, அரசியல் களத்தில் அனலைக் கூட்டியிருக்கிறது.


அ.தி.மு.க-வுடனான கூட்டணி முறிந்துபோகும் என பா.ஜ.க தேசியத் தலைமை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. கூட்டணியே இல்லை என அ.தி.மு.க அதிரடித்ததில், விக்கித்துப் போயினர். அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்க அக்டோபர் 2-ம் தேதி மாநிலத் தலைவர் அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்தது பா.ஜ.க-வின் தேசியத் தலைமை. 3-ம் தேதி (இன்று) அண்ணாமலை தலைமையில் சென்னையிலுள்ள கமலாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னைக்குத் திரும்பாதது, பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியிருக்கிறது.
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com