முதலமைச்சர் இந்தியா பற்றி பேசுவதற்கு முன்பு தமிழ்நாட்டைப் பற்றி பேச வேண்டும்” என்றார்.
அதைத் தொடர்ந்து அண்ணாமலையிடம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்தவர், “சீமானிடம் எனக்குப் பிடித்ததே அவரது தைரியமும், துணிச்சலான பேச்சும்தான். ஆனால், ஒரு பெண் புகார் கொடுத்துவிட்டார் என்பதற்காக பயந்ததுடன், தி.மு.க-வை ஆதரிக்கிறேன் என்கிறார். போன வாரம் வரைக்கும் வேறு ஒரு சீமான், இப்போது 2.0 சீமான்.


பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட்டால், அந்த தொகுதியில் தி.மு.க போட்டியிடாவிட்டால் நான் போட்டியிடுவேன் என சீமான் கூறியிருக்கிறார். நாங்களும் திராவிடக் கட்சிகளும் பங்காளி என்கிறார். தி.மு.க-வை பங்காளி என்று கூறுவதால், தி.மு.க-வின் ’பி ’டீம் சீமான் என நிரூபணமாகிவிட்டது. சீமான் பேச்சு, அவர் மீதுள்ள மரியாதையைக் குறைத்துவிட்டது. சீமான் இப்படி பல்டி அடிப்பார் என கனவில்கூட நான் நினைக்கவில்லை. ஒரு மனிதனை ஒரு புகார் எந்த அளவுக்கு மாற்றிருக்கிறது என்று பாருங்கள்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com