“திமுக ஆட்சிமீது `356' சட்டம்; எனக்கும் ஆசைதான்;

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் பா.ஜ.க சார்பில் `என் மண், என் மக்கள்’ 3-ம் கட்ட நடைப்பயணத்தை மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று தொடங்கினார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கிவைத்தனர். இந்த நடைப்பயணத்தில் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் ஊழல் செய்யும் துறையாக இந்துசமய அறநிலையத்துறை இருக்கிறது. 1992-ம் ஆண்டு தொடங்கி 2017-ம் ஆண்டு வரை கடந்த 25 ஆண்டுகளில் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 1,200 தொன்மைவாய்ந்த சிலைகள் காணாமல் போயிருக்கின்றன. அரசின் அறிக்கைபடியே 1,200 சிலைகள் என்றால், அதைவிட 10 மடங்கு கூடுதலாகத்தான் சிலை திருட்டு நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. 2014-ம் ஆண்டு தொடங்கி 2023-ம் ஆண்டு வரை 361 சிலைகளை பிரதமர் மோடி மீட்டிருக்கிறார். இதில், தமிழகத்தில் திருடப்பட்ட சிலைகளும் அடக்கம்.

அண்ணாமலை யாத்திரை

1985-ம் ஆண்டு 5.25 லட்சம் ஏக்கர் நிலம் இந்துசமய அறநிலையத்துறையிடம் இருந்தது. 2023-ம் ஆண்டு கணக்குப்படி, 3.25 லட்சம் ஏக்கர்தான் உள்ளது. 40 ஆண்டுகளில் 2 லட்சம் ஏக்கர் நிலத்தைக் காணவில்லை. 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அ.தி.மு.க ஆட்சி நிறைவுறும்போது, அத்திக்கடவு-அவிநாசி திட்டம் 87 சதவிகிதம் நிறைவுற்றது. ஆனால், 30 மாதங்களாக ஆட்சி நடத்தும் தி.மு.க, 13 சதவிகிதம் பணிகளை முடிக்காமல், தி.மு.க-வினர் கமிஷன் அடிக்கப் பார்க்கின்றனர்.

பியூஸ் கோயல் , அண்ணாமலை, முருகன், பாஜக-வினர்

தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் நெசவாளர்களுக்குத் தனி கூட்டுறவு வங்கி ஆரம்பிக்கப்படும் என்றார்கள், தொடங்கினார்களா… விசைத்தறி நெசவாளர்களிடம் பள்ளிச் சீருடை பெறப்படும் என்றார்கள், அதனைச் செய்தார்களா… நூலுக்கு அரசு கொள்முதல் செய்யப்படும் என்றார்கள், அதனைச் செய்தார்களா… இதற்கெல்லாம் ஒரு செங்கல்லைக்கூட காணவில்லை. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதற்கு செங்கல்லை தூக்கிக்கொண்டு வரட்டும்.

சேவூர் நிலக்கடலைக்கு புவிசார் குறியீடு பெற, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். 356 சட்டத்தை இந்திரா காந்தி 50 முறை பயன்படுத்தியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி 90 முறைக்கு முறைக்கு மேல் பயன்படுத்தியிருக்கிறது. தி.மு.க ஆட்சிமீது 356 பயன்படுத்த வேண்டும் என்று எனக்கும், மக்களுக்கும் ஆசைதான். ஆனால், மோடி ஜனநாயக முறையில் ஆட்சி செய்கிறார். இந்த 9 ஆண்டுகளில் ஒருமுறைக்கூட 356-ஐ எங்கும் பயன்படுத்தவில்லை. வரும் தேர்தலில் 400 இடங்களைப் பிடித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் வலுவாக ஆட்சி அமைக்கும்” என்றார்.

முன்னதாகப் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், “அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன எதிர்ப்பு பேச்சுக்கு, வரும் மக்களவைத் தேர்தலில் பதில் கிடைக்கும். தமிழின் பெருமையை உலக நாடுகளுக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. இளம் தளபதியான அண்ணாமலை தமிழகத்தின் உயர்வுக்காக உழைக்கிறார்.

அண்ணாமலை

பிரதமர் மோடி ஊழலை ஒழிக்க உறுதிமொழி எடுத்து உழைத்துக் கொண்டிருக்கிரார். நமது நாட்டிலேயே ஊழல் அதிகம் செய்யும் கட்சி தி.மு.க மட்டும்தான். தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் ஊழல் இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. அவரின் மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகிய இருவரும் ஊழலை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். பா.ஜ.க-வுக்கு சேவை செய்ய தமிழகத்தில் வாய்ப்பு கொடுத்தால், காவிரி உள்ளிட்ட தண்ணீர் பிரச்னை இல்லாமல் செய்திடுவோம். விவசாயிகள் அல்லது பொதுமக்கள் குறித்து தி.மு.க கவலைப்படுவதில்லை. கான்ட்ராக்டரிடம் எவ்வளவு பணம் வாங்கலாம் என்பதிலேயே குறியாக இருக்கின்றனர். வாரிசு அல்லாமல் சாதாரண விவசாயி மகனை தமிழகத்தில் களமிறக்கியிருக்கிறோம்” என்றார். இதைத் தொடர்ந்து, திருப்பூர் செட்டிபாளையத்தில் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ மருத்துவமனையை அமைச்சர் பியூஸ் கோயல் ஆய்வு செய்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *