இது குறித்து ஆச்சார்யா, “இறைச்சி மற்றும் அசைவ உணவகத்திலிருந்து புகை மற்றும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நகராட்சி நிர்வாகிகளிடம் பேசினேன். அப்போது, தொண்டை வலித்ததால் நான் சத்தமாகப் பேசினேன். என்னுடைய செயல் யாருக்கேனும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மேலும், எந்தவொரு குறிப்பிட்ட பிரிவினருக்காக இதைச் செய்யவில்லை. பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையின்படி நான் செயல்பட்டு வருகிறேன். அனைவரின் ஆதரவையும், நம்பிக்கையையும், அனைவரின் கூட்டு வளர்ச்சியையும் நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்தார். இருப்பினும், அந்தப் பகுதியில் இருக்கும் இறைச்சிக் கடைகளால் நோய் உண்டாவதால் ஆச்சார்யா அவ்வாறு செய்ததாகக் கூறப்பட்டாலும், அந்தப் பகுதியில் இஸ்லாமியர்கள்தான் அதிகம் கடை வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.


இந்த சம்பவத்தையடுத்து, சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம், “நகர விற்பனைக் குழு அமைத்து, விற்பனை மண்டலங்களை உருவாக்கி, பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதுவரை, நகர விற்பனைக் குழு, வியாபாரிகளுக்குப் பாதுகாப்பு வழங்கவில்லை. விற்பனையாளர்களுக்கு உரிமம் வழங்கப்படவில்லை. விற்பனை மண்டலங்களும் அடையாளம் காணப்படவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சாலையோர இறைச்சிக்கடைகள் மற்றும் அசைவ உணவாக வியாபாரிகளை மிரட்டுவது மிகுந்த கவலையளிக்கிறது” என அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com