“கூட்டணியில் இருக்கிறார்கள் என மகிழ்ச்சியோ, இல்லை என

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில், `தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க-வின் மாநிலத் தலைமை கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டு, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அ.தி.மு.க-மீதும், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களையும், அ.தி.மு.க-வின் கொள்கைகளையும் விமர்சித்துவருகிறது. இந்தச் செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, அ.தி.மு.க., பா.ஜ.க-வின் கூட்டணியிலிருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தும் விலகிக்கொள்கிறது” என்று அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைஎடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை

அதைத் தொடர்ந்து, கூட்டணி குறித்து பா.ஜ.க மேலிடம்தான் முடிவு செய்யும் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கடந்த திங்கள் கிழமை டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார். இந்த நிலையில், சென்னையில் தமிழ்நாடு பா.ஜ.க நிர்வாகிகளின் கூட்டம் தி.நகரில் இருக்கும் பா.ஜ.க அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது. இதில், கேசவ விநாயகம், ஹெச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் என முக்கியப் பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர். பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வருவதற்கு முன்பே கூட்டம் தொடங்கியது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *