தொடர்ச்சியாக பல்வேறு விவகாரங்களில் நவீன் பட்நாயக்கை விமர்சித்துவரும் பா.ஜ.க-வினர், நகர்ப்புறங்களில் குடிசைகளில் வசிக்கும் 65,000 ஏழைக் குடும்பங்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் பட்நாயக் பட்டா வழங்கியதையும் விமர்சித்தனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் நவீன் பட்நாயக் வெற்றி பெறுவதற்கு ஏழைகளுக்கு பட்டா வழங்கும் ‘ஜகா மிஷன்‘ என்ற திட்டம்தான் பெரிதும் கைகொடுத்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், ‘ஜகா மிஷன் திட்டம், ஏழைகளுக்கு புதிய அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது. இந்த நகரத்தில் ஏழைகள் சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கான உரிமை ஏழைகளுக்கு இருக்கிறது. தொழிலாளிகளின் கடின உழைப்பு, இந்த நகரத்திலுள்ள கட்டங்களின் ஒவ்வொரு செங்கலிலும் இருக்கிறது’ என்றார்.

மதுபான வியாபாரிகளிடமிருந்து பெரும் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதையொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க-வின் இளைஞரணியைச் சேர்ந்தவர்கள், முதல்வர் நவீன் பட்நாயக் உருவபொம்மையை எரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பா.ஜ.க-வினரின் போராட்டம், விமர்சனம் ஆகியவை குறித்து பிஜு ஜனதா தளம் தரப்பில் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
2024 நாடாளுமன்றத் தேர்தலிலும், அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் பிஜு ஜனதா தளம் பெரும் வெற்றியைப் பெறுவதற்காக கடினமாக உழைத்துவருகிறார் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வி.கே.பாண்டியன். நவீன் பட்நாயக்குக்கு பலம் சேர்ப்பதற்காகவும், பிஜு ஜனதா தளத்தின் வெற்றியை உறுதிசெய்வதற்காக சமீபத்தில் ஐ.ஏ.எஸ் பணியை உதறிவிட்டு, நவீன் பட்நாயக்குடன் முழுமையாகக் கைகோத்திருக்கிறார் வி.கே.பாண்டியன். ஒடிசாவின் அரசியல் களம் சூடுபறக்கத் தொடங்கியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
