100 நாள் வேலை செய்பவர்களா நீங்கள்! அப்ப உங்களுக்கு தான் இந்த நியூஸ் – விரைவில் நிலுவை ஊதியம் அமைச்சர் அறிவிப்பு!
விருதுநகர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊழியர்களுக்கு விரைவில் ஊதியம் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
தமிழகத்தில் சுதந்திர தினம், குடியரசு தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் ஒவ்வொரு ஆண்டும் கட்டயமாக கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என் அரசு அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் வல்லக்கிணறு அருகே தோணுகால் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டார்.
அதில் ஒவ்வொரு ஆண்டும் கருப்பொருளை மையமாக கொண்டு தான் இந்த கிராம சபை நடைபெற்று வருகிறது என அமைச்சர் கூறினார். அந்த வகையில் இந்த ஆண்டு ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற கருப்பொருளை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார். மேலும் ஊராட்சியில் இந்த ஆண்டு பல்வேறு பணிகள் ரூ.2.09 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் அவர்கள் இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விரைவில் நிலுவை ஊதியம் வழங்கப்படும் என் உறுதியளித்தார். இதனை தொடர்ந்து பொது மக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அமைச்சரிடம் வழங்கினார்கள்.
நன்றி
Publisher: jobstamil.in