தெலங்கானா மாநிலம் மேட்டூர் நகரில் வசிக்கும் பொதுமக்கள் பலருக்கும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேற்று முன்தினம் திடீரென்று ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரை டெபாசிட் ஆகியுள்ளது. இதற்கான குறுஞ்செய்தியும் அவர்களது செல்போன் எண்ணுக்கு வந்துள்ளது. எஸ்.பி.ஐ. மட்டுமின்றி அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்குமே பணம் டெபாசிட் செய்யப்பட்டிருந்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஒரு சிலர் வங்கிக் கணக்கில் டெபாசிட் ஆன பணத்தை உடனே ஏடிஎம் சென்று எடுத்துள்ளனர். மீண்டும் பணத்தை அவர்களே எடுத்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்துள்ளனர். இந்த செய்தியானது மாநிலம் முழுவதும் வைரலாக பரவியது. இதேபோல் கர்நாடகா, ஆந்திராவில் உள்ள சில மாவட்டங்களிலும் பொதுமக்களின் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் ஆகியுள்ளது.
இந்த சம்பவம் வங்கி அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து வங்கிக் கணக்கில் எப்படி பணம் டெபாசிட் செய்யப்பட்டது என்பது குறித்த விவரங்களை போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
நன்றி
Publisher: 1newsnation.com