தஞ்சாவூர் அருகே முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ, தன்னை பணி செய்யவிடாமல் மிரட்டுவதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தன்னை வேறு இடத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும் எனவும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர், கூடுதல் கலெக்டரிடம் மனு அளித்திருக்கும் சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள திருவோணம் யூனியன் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருப்பவர் அறிவானந்தம். இவர் சமீபத்தில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்திடம், புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அதில், `திருவோணம் தி.மு.க வடக்கு ஒன்றியச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான மகேஷ் கிருஷ்ணசாமி என்னை பணி செய்யவிடாமலும், தனக்கு வேண்டிய நபர்களுக்கு மட்டுமே ஒப்பந்தப் பணிகளை வழங்க வேண்டும் என மிரட்டுகிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com
