`நான் என்ன தவறு செய்தேன்?' – அஸ்ஸாம் கோயிலுக்குள் நுழைய

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இரண்டாம் கட்டமாக மணிப்பூரில் இருந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தொடங்கி இருக்கிறார். அவர் அஸ்ஸாமில் யாத்திரையை தொடங்கியதில் இருந்து பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறார். ராகுல் காந்தியின் யாத்திரைக்குள் புகுந்து பா.ஜ.க.வினர் அடிக்கடி குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு யாத்திரையின் போது பா.ஜ.க.வினர் ஜெய்ராம் ரமேஷ் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினர். தற்போது ராகுல் காந்திக்கு கோயிலில் சென்று வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள நாகாவ் என்ற இடத்தில் இருக்கும் புகழ்பெற்ற பதத்ரவா சத்ரா கோயிலுக்கு ராகுல் காந்தி சென்றார். ஆனால் கோயிலுக்குள் நுழைய ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி அங்கிருந்து செல்ல மறுத்து கோயிலுக்கு வெளியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்.

பா.ஜ.க.வினரும் ராகுல் காந்தியை திரும்ப போகச்சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதில் பேசிய ராகுல் காந்தி, “கோயிலில் நுழைய தடை விதிக்க நான் என்ன தவறு செய்தேன். நாங்கள் பிரச்னையை உருவாக்க விரும்பவில்லை. அமைதியாக கோயிலில் சாமி கும்பிடவே விரும்புகிறோம்”என்று தெரிவித்தார். அஸ்ஸாமில் நடத்தப்பட்டு வரும் யாத்திரையில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று மாலை நாடு முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதனிடையே அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த சர்மா விடுத்துள்ள வேண்டுகோளில், ”ராமர் கோயில் திறக்கப்படும் நேரத்தில் யாத்திரையில் அடிக்கடி வன்முறை ஏற்படுவதால் ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ஒத்தி வைக்கவேண்டும். ராமர் கோயில் திறப்பு விழாவும், பதத்ரவா கோயிலுக்கு செல்வதிலும் தேவையில்லாமல் போட்டி ஏற்படுவதை ராகுல் காந்தி தவிர்க்கவேண்டும். அசம்பாவித சம்பவங்களால் அஸ்ஸாமிற்கு கெட்ட பெயர் ஏற்படும்” என்று கேட்டுக்கொண்டார்.

போராட்டத்தில் ராகுல் காந்தி

ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு பிறகு ராகுல் காந்திக்கு அனுமதி கொடுக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாலை 3 மணிக்குத்தான் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் கோயிலுக்குள் செல்ல அனுமதி கொடுத்திருந்தனர். ஆனால் திடீரென அனுமதிக்க முடியாது என்று சொல்கின்றனர் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *