இந்த நிலையில், ராம் மந்திர் அறக்கட்டளை செயலர் சம்பத் ராய் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், “ராமர் கோயிலின் கருவறை தயாராக இருக்கிறது. குழந்தை ராமர் சிலையும் தயாராக இருக்கிறது. ஆனால் கோயில் முழுவதும் இன்னும் முழுமையாக கட்டுமானப்பணிகள் முடியவில்லை. இந்த முழுப்பணியும் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகலாம். இன்னும் கோயிலில் நிறைய வேலைகள் உள்ளன.

எனவே, ஏராளமான மக்கள் இன்னும் கட்டுமானப் பணி முழுமைப்பெறாத கோயிலுக்கு வந்தால் நகரத்தில் கூட்ட நெரிசல் ஏற்படும். எனவே, நெரிசலைத் தவிர்க்க, ஜனவரி 22-ம் தேதி அயோத்திக்கு வருவதற்குப் பதிலாக அருகிலுள்ள கோயிலில் “ஆனந்த் மஹோத்சவ்’ கொண்டாடுமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். அது எந்தக் கோயிலாக இருந்தாலும் சரிதான்” என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
