பிரான்ஸில் தரையிறங்கிய விமானம் நேற்று அங்கிருந்து இந்தியர்களுடன் இந்தியாவுக்கு புறப்பட்டது. அதில் 276 பயணிகள் இருந்தனர். இரண்டு மைனர்கள் உட்பட 25 பேர் தொடர்ந்து பிரான்ஸில் இருக்கின்றனர். அவர்கள் தங்களுக்கு அகதி அந்தஸ்து கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். எனவே அவர்கள் தொடர்ந்து பிரான்ஸில் இருக்கின்றனர்.


இரண்டு பேர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை சாட்சியமாக மாற்றி அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். நடப்பு ஆண்டில் 97 ஆயிரம் இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றுள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 51 சதவீதம் அதிகமாகும். அவர்களில் 41 ஆயிரம் பேர் மெக்சிக்கோ வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றுள்ளனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com