’ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்த இவர், விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர் வெற்றிப் படங்களை கொடுத்தார். இதன் மூலம் மிகக் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறினார்.
இவர், பிகில் படத்திற்கு 25 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. பிகில் படத்தை தொடர்ந்து ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை அட்லி இயக்கி உள்ளார். இந்நிலையில், ஜவான் படத்திற்கு அட்லி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜவான் படத்திற்காக அட்லிக்கு ரூ.32 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அட்லியின் நிகர சொத்து மதிப்பு சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 42 கோடி) இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஜவான் படத்தின் மூலம் அட்லீ தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளார். ஜவான் படம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை உறுதி செய்ய தயாராகி வரும் நிலையில், இப்படம் ரூ.1,000 கோடி கிளப்பில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லு அர்ஜுனை வைத்து அட்லி இயக்கப் போகும் அடுத்த படத்திற்கு ரூ.52 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி உள்ள ஜவான் திரைப்படம் செப்.7ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழில் தொடர் வெற்றி படங்களை கொடுத்த அட்லி, இந்தியிலும் சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நன்றி
Publisher: 1newsnation.com