இதுதொடர்பாக விஸ்வ இந்து பரீசத் முன்னாள் மாநிலத்துணைத்தலைவர் ஆர்பிவிஎஸ் மணியன் பேசிய காணொலி ஒன்று வைரல் ஆகியுள்ளது. அதில் அவர், ‘இந்திய அரசியலமைப்பை அம்பேத்கர் மட்டும் எழுதவில்லை. அம்பேத்கரும் திருமாவளவனும் ஒரு சாதி கிடையாது. திருமாவளவன் பறையர். அம்பேத்கர் சக்கிலியர். இங்கு இருக்கும் பறையர் யாராவது சக்கிலியர் வீட்டில் மண முடிப்பார்களா?.பறையர் யாராவது பள்ளர் வீட்டில் கல்யாணம் முடிப்பாரா?. நீங்கள் எல்லாம் இப்போதுசண்டை போட்டுக்கொண்டு இருக்கீங்க. இந்திய அரசியலமைப்பை கிட்டத்தட்ட 300 பேர் எழுதியுள்ளனர். அம்பேத்கர் மட்டும் எழுதவில்லை. எல்லோரும் பேசியதை சரியாக இருக்கிறதா என்பதை ஆராய்பவர் மட்டுமே அம்பேத்கர். எனவே, இந்திய அரசியலமைப்புக்கும் அம்பேத்கருக்கும் சம்பந்தம் இல்லை’ எனப் பேசியுள்ளார். இந்தப் பேச்சு சர்ச்சையான நிலையில் இன்று காலை ஆர்பிவிஎஸ் மணியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com