தீபாவளி பண்டிகைக்கு நீங்களும் சொந்த ஊருக்கு போறீங்களா..? அப்போ இந்த வாய்பை மிஸ் பண்ணிடாதிங்க…

அனைத்து மதத்தினரும் இணைந்து கொண்டாடும் ஒரு பண்டிகையாக தீபாவளி பண்டிகை உள்ளது. வருடந்தோறும் தீபாவளி பண்டிகை நவம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அதேபோல், இந்த வருடமும் தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் சேர்ந்து கொண்டாடும் பண்டிகையாக உள்ளது.

Are you going to your hometown for Diwali So dont miss this opportunity read it now

பொதுவாக தீபாவளி பண்டிகைக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் படிப்பு மற்றும் வேலைக்காக சென்றவர்கள் குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுப்பது வழக்கம். இதனால், தீபாவளி போன்ற போன்ற பண்டிகை நாட்களில், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் கூட்டம் அலைமோதும்.

இதுபோன்ற கூட்ட நெரிசலில் சிக்கி கொள்ளாமல் இருக்கவும் பேருந்துகள் கிடைக்காமல் தவிக்கும் நிலையை கட்டுப்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இன்னும் சில வாரங்களில் வர இருக்கும் தீபாவளி பண்டிகைக்கு அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு குறித்த அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.

Also Read : கிரிக்கெட் ரசிகர்களுக்கு அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட மெட்ரோ..! என்னன்னு தெரியுமா? தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க…

அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு போக்குவர போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை திருப்பதி, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வதற்கான முன்பதிவு நாளை முதல் தொடங்க உள்ளது. நவம்பர் 8 ஆம் தேதிக்கு நாளையும்(திங்கட்கிழமை) நவம்பர் 9 ஆம் தேதிக்கு நாளை மறுநாளும்(செவ்வாய்க்கிழமை) முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்பை நீங்களும் பயன்படுத்தி பயன்பெறுங்கள்!


Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *