Tamilnadu Aavin Milk Rate Hike Issue

நம்முடைய அன்றாட வாழ்கையில் மிகவும் அத்தியாவசியமான பொருட்களில் முக்கியமானது பாலாகும். தமிழகத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து நேரடியாகவே சென்று பாலை கொள்முதல் செய்து, குறைந்த விலையில் மக்களுக்கு விற்பனை செய்வதில் முதலிடம் வகிப்பது ஆவின் நிறுவனமாகும். இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே ஆவின் பால் விலை உயர்த்த உள்ளதாக தகவல் வந்த நிலையில், இது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசினார்…
ஆவின் பால் விலையை உயர்த்துவது குறித்து எந்த முயற்சியிலும் அரசு ஈடுபடவில்லை. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தவறான செய்திகளை ஏதும் பொதுமக்கள் நம்ப வேண்டாம். தனியார் நிறுவனத்தின் நெய்யானது ஒரு லிட்டர் ரூ.1000 க்கும், ஆவின் நெய்யானது ரூ.700 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், ஆவின் நிறுவனத்தின் பொருட்களிலும், தரத்திலும் எந்தவித மாற்றமும் அரசாங்கம் செய்யவில்லை.
Also Read >> வாட்சப்ல இப்படி ஒரு அப்டேட்டா..! நீங்களும் தெரிஞ்சுக்கோங்க… உங்களுக்கும் உதவும்…
மேலும், இதுகுறித்து வரும் புகார்களை உடனுக்குடன் ஆய்வு செய்து சரி செய்து வருகிறது. அதுமட்டுமலாமல், ஆவின் பாலின் விலை உயர்வு எனபது ஒரு கற்பனை எனவும், ஆவின் பால் விலை உயர்த்தப்படாது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
நன்றி
Publisher: jobstamil.in