
புதிய மின் இணைப்பு – விண்ணப்பித்து 10 நாட்களுக்குள் வழங்காவிட்டால் மின்வாரியத்திற்கு அபராதம்
தமிழ்நாட்டில் புதிதாக மின் இணைப்பு வாங்குபவர்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் பிரச்சினை வந்தாலோ அல்லது தாமதம் ஏற்பட்டாலோ அதற்கான இழப்பீடு வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்போருக்கு 7 நாட்களுக்குள் இணைப்பு வழங்கவேண்டும். அப்படி வழங்காவிட்டால் இழப்பீடு வழங்கும் அறிக்கையை மின் வாரியம் மே மாதம் வெளியிட்டது.
அதன்படி புதிய இணைப்பு விண்ணப்பம் சரியாக பூர்த்தி செய்யவில்லை எனில் 3 நாட்களுக்குள் நுகர்வேருக்கு தெரிவிக்க வேண்டும். விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் இணைப்பு வழங்கவேண்டும், தவறினால் ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபாய் அபராதம் வழங்க மின்வாரியம் அறிவித்துள்ளது.
ALSO READ > அட..! தங்கம் விலை இவ்ளோ குறைஞ்சிடுச்சா?
அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் இருந்தால் உடனே புதிய மின் இணைப்பு வழங்கலாம் எனவும், மீட்டர்கள் பற்றாக்குறை இருந்தால் மட்டுமே தாமதம் ஆகும் என கூறுகின்றனர். எனவே தேவையான புதிய மீட்டர்களை இருப்பு வைத்திருப்பது மின் வாரியத்தின் பொறுப்பு ஆகும்.
நன்றி
Publisher: jobstamil.in