பொதுவாகவே தனியார் சேனல்கள் ஒன்றோடொன்று போட்டிபோட்டி கொண்டு புதிய புதிய சீரியல்கள், விளையாட்டு கேம் ஷோக்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை ஒலிபரப்பு செய்து பொதுமக்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிப்பரப்பப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும் எளிதில் மக்களை கவர்ந்து விடுகின்றனர். அதுபோன்று ஒளிபரப்பட்ட ஒரு நிகழ்ச்சிதான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி முதன் முதலில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்பொழுது 7 வது சீசன் தொடங்கியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு மக்களிடையே இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், பிக்பாஸில் 6 சீசன்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிக்பாஸ் சீசன் 7 தொடங்கப்பட்டது. இதில், முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் நுழைந்தார். அதன் பிறகு பூர்ணிமா ரவி, ரவீனா தஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிசந்திரா, அக்ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா என 18 போட்டியாளர்களும் உள்ளே அனுப்பட்டு போட்டியை தொடங்கினர். இந்த சீசன் எப்பொழுதும் போல் இல்லாமல் புதுவிதமாக இரண்டு வீடுகள் உள்ளதாக ஏற்கனேவே ப்ரமோவில் கமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இரண்டாவது வீட்டில் என்வெல்லாம் நடக்க போகுதோ என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
பிக்பாஸ் சீசன் 7 தொடங்கி ஒரு வாரம் ஆன நிலையில், இந்த வாரம் வெளியே போவது யார்? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இந்த வார எவிக்ஷன் நாமினேஷனில் ஜோவிகா, ஐஷு, ரவீனா, அனன்யா, செல்லதுரை, யுகேந்திரன், பிரதீப் என ஏழு பேர் உள்ளதால் இதில் யார் வெளியே போவார் என்று ரசிகர்களும் எத்ரிபார்த்து காத்திருக்கும் நிலையில், தற்பொழுது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தற்பொழுது வரை பதிவாகியிருக்கும் வாக்குகளின் அடிப்படையில் அனன்யா ராவ் என்பவர் குறைந்த வாக்கு பெற்றிருப்பதால் இந்த வாரம் அவர் வெளியேற அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
நன்றி
Publisher: jobstamil.in