பொதுவாக பண்டிகை காலங்களில் பேருந்து நிலையங்களில் கூட்டம் பலமடங்கு அதிகமாக காணப்படும். ஏனெனில் படிப்பு மற்றும் வேலை போன்ற பல்வேறு காரணங்களால் பெரும்பாலான மக்கள் சொந்த ஊரை விட்டுவிட்டு வெளியூர் மற்றும் வெளி மாநிலம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு செல்லும் மக்கள் பண்டிகை காலங்களில் சொந்த ஊர் திரும்புவது வழக்கம். இதனால் பண்டிகை நாட்களில் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் வழக்கத்திற்கும் மாறாக கூட்டம் அதிகமாக இருக்கும். இதில் சிலருக்கு பேருந்துகளில் நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் போய்விடுகிறது.
மக்களின் இத்தகைய சிரமத்தை குறைக்கவே தமிழக அரசு டிக்கெட் முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பண்டிக்கை காலங்களில் சொந்த ஊர் செல்வதற்கு ஒரு வாரத்திற்கும் முன்பாகவே டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். பண்டிகை காலங்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதன் மூலம் பேருந்துகள் கிடைக்காமல் அவதிப்படும் நிலையில் இருந்து தப்பிக்க முடியும்.

இந்நிலையில், தமிழகத்தில் ஆயுத பூஜையானது இந்துக்கள் கொண்டாடும் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக உள்ளது. இந்த ஆண்டுக்கான ஆயுத பூஜையானது அடுத்த வாரத்தில் வர இருப்பதாலும் இந்த ஆயுத பூஜையை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த தொடர் விடுமுறையின் காரணமாக வருகிற அக்டோபர் 20,21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சுமார் 2 ஆயிரத்து 265 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, பேருந்துகள் மற்றும் ரயிகளில் ஒரு வாரத்திற்கான இருக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read : தமிழக விளையாட்டு வீரர்களே… அரசு வேலை வேண்டுமா? இதோ உங்களுக்குத்தான் இந்த அறிய வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க…!
மேலும், ஆயுத பூஜையை தொடர்ந்து நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகையும் வர இருப்பதால் இதற்கான முன்பதிவுகளும் முழுமையாக நிரம்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு பேருந்துகளில் முன்பதிவு அனைத்தும் முழுமையாக நிரப்பப்பட்ட நிலையில் தனியார் பேருந்துகள் தங்களது கட்டணத்தை உயர்த்தி வருவதாக பயணிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
நன்றி
Publisher: jobstamil.in