இளைஞர்களே ரெடியா?… புதிதாக 50000 பேருக்கு அரசுப்பணி!… முதலமைச்சர் அறிவிப்பு!

இளைஞர்களே ரெடியா?… புதிதாக 50000 பேருக்கு அரசுப்பணி!… முதலமைச்சர் அறிவிப்பு!

அடுத்த இரு ஆண்டுகளில் புதிதாக 50,000 பேர் அரசுப்பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றோருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். அதன்படி, டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 10,205 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். 2022 ஜூன் மாதம் நடந்த டிஎன்பிஎஸ்சி குருப் தேர்வில் 10,205 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்ச்சி பெற்ற 10,205 பேர் பல்வேறு அரசுத்துறைகளில் இளநிலை பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், அரசு வேலைக்கு உள்ள மதிப்பு எப்போதும் குறையாது என தெரிவித்தார். முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையில், தன்னலம் கருதாமல் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஏரளாமானோர் உள்ளனர். மக்கள் சேவையை லட்சியமாக கொண்டு ஊழியர்கள் செயல்பட வேண்டும். அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் பணியை, எந்த குறையும் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும். நடப்பாண்டில் மேலும் 17,000 பேர் அரசுப்பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். அடுத்த இரு ஆண்டுகளில் புதிதாக 50,000 பேர் அரசு பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *