புயல் மற்றும் பெருமழையால் சேதமடைந்த நிலையில் மத்திய அரசு கண்டிப்பாக நிவாரணம் வழங்கும். அந்த நிவாரணத்தை வாங்கி மக்களிடம் கொடுத்து விட்டால் எல்லாம் சரி என்று தி.மு.க அரசு நினைப்பது தவறு. நான்கு மாவட்டங்கள் முற்றிலுமாக பொருளாதார ரீதியாக பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. தூத்துக்குடியில் உள்ள உப்பளங்கள் ஏறத்தாழ 90% முற்றிலும் வீணாகிவிட்டது. மீண்டும் தூத்துக்குடியில் பழைய நிலைமைக்கு உப்பு உற்பத்தி கொண்டு வர இரண்டு ஆண்டுகள் ஆகும்.
தற்போது நிவாரணம் கொடுத்தால் போதும் என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?. ஒவ்வொருமுறையும் மழையும், புயலும் தமிழகத்தை ஆறு மாதம் பொருளாதார ரீதியாக பின்னுக்கு கொண்டு செல்கிறது. தூத்துக்குடியில் பக்கிங் கால்வாய் 120 அடி இருந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் வாயிலாக அதனை 20 அடியாக மாற்றியுள்ளனர். இதனால்தான், பெருவெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் வெளியே கொப்பளிக்கிறது. தமிழக அரசு உள்ளபடி வெள்ளம் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றால் தூத்துக்குடியில் பக்கிம் கால்வாயை மீண்டும் அகலப்படுத்த வேண்டும்.


வெள்ளம் ஏற்படும்போது அதனை எப்படி சரி செய்வது என்பதனை யோசிக்காது மத்திய அரசை எப்படி குறை கூறலாம் என்று காலை முதல் மாலை வரை திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். சென்னை வெள்ளம் மற்றும் தென் மாவட்ட வெள்ளத்தால் தமிழக அரசிற்கு படிப்பினை இல்லை. எப்படி மத்திய அரசின் மீது பழி போடலாம் என்பதை மட்டுமே யோசித்து வருகிறார்கள். கடந்த 2017 -ம் ஆண்டு, 19 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் எந்த ஒரு அரசியல்வாதியும் பண்ணாத செயலை அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் மற்றும் சகாக்கள் செய்தனர். சமூக வலைதள பக்கங்களில் “கோ பேக் மோடி’ என பதிவிட்டனர். தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து கோ பேக் ஸ்டாலின் என பதிவிடுவோம். ஆனால், அவரின் பதவியை கருதி நாகரிகமாக செயல்படுகிறோம்.
பிரதமர் மோடியின் தமிழக வரவை வரவேற்கும் விதமாக கம் பேக் மோடி என தமிழக மக்கள் பதிவிட வேண்டும். தமிழக முதல்வரை தமிழகத்தில் கேவலப்படுத்த பா.ஜ.க விரும்பவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையை விட்டு எங்கு சென்றாலும் ஸ்டாலினுக்கு எதிராக, ‘கோ பேக் ஸ்டாலின்’ என்பதை எங்களால் ட்ரெண்டிங் செய்ய முடியும். ஆனாலும், அவரின் பதவிக்கு மரியாதை தருகிறோம். தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் எங்கு சென்றாலும் கோ பேக் ஸ்டாலின் என்பதை தி.மு.க ஐ.டி விங்கை விட 1000 மடங்கு ட்ரெண்ட் செய்ய முடியும். இந்த சவாலுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஒப்புக்கொள்வாரா?. பா.ஜ.க ஐ.டி விங் சமூகவலைதளங்களில் கம்பு சுற்றுபவர்கள். எங்களிடம் தி.மு.க ஐ.டி விங் தனது வேலையை காட்டக்கூடாது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com