தொடர்ந்து பேசும்போது, “2024-க்கான நாடாளுமன்றத் தேர்தல் மோடிக்கான தேர்தல். மோடியை விட பிரதமர் வேட்பாளருக்கான தகுதி யாருக்கும் இல்லை.
தமிழகத்தில் அப்படி யாருக்காவது இருப்பதாக கூறினால் மக்கள் சிரிப்பார்கள். இந்த தேர்தலில் யாரெல்லாம் மோடியை ஏற்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைப்போம். தமிழ்நாட்டில் எங்கு போட்டியிட்டாலும் மோடி அதிக வாக்குகளில் வெற்றி பெறுவோர். 2024 மட்டுமல்ல 2038 வரை மோடிதான் பிரதமர்.
மோடிதான் உண்மையான தமிழர். ஓங்கோலிலிருந்து வந்தவர்கள் தங்களை தமிழர்கள் என்று சொல்லும்போது, மோடியும் தமிழர்தான்.
இந்திய கூட்டணி சுயநலக்கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி மோடியை ஆதரிக்கும் கூட்டணி, மோடியை ஏற்றுக்கொண்டு யார் வந்தாலும் கூட்டணி வைத்துக்கொள்வோம்.
பொன்முடி வழக்கில் நீதிபதி மீது கம்யூனிஸ்ட், வி.சி.க தலைவர் ஆகியோர் சந்தேகம் எழுப்புகின்றனர். இதற்கு அவர்கள் தி.மு.க-விலயே இணைந்து விடலாம். தி.மு.க கூட்டணியை பா.ஜ.க-வுடன் ஒப்பிட வேண்டாம்.
தற்போது தமிழகத்தில் பாஜக பலமாக உள்ளது. நான் எந்த கூட்டணி தலைவரையும் சந்திக்க செல்வதில்லை, அவர்களுக்கு ஆதரவு வேண்டும் என்றால் எங்களை பார்ப்பார்கள். என் வேலை பா.ஜ.க-வை பலப்படுத்துவதுதான் அந்த வேலையை வெற்றிகரமாக செய்கிறேன். மற்ற கட்சிகளை பலப்படுத்துவது என் வேலை இல்லை.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com