எதிலும் வெற்றிபெறவில்லை. அதுபோல, இந்த முறை நடந்துவிடக் கூடாது என நினைக்கிறோம். ஆகவே இம்முறை எம்.பி பதவியை பெற்றிடுவது அவசியம். தேர்தலில் போட்டியிட்டு வெல்வதென்றால் அ.தி.மு.க-தான் ஓரே ஆப்ஷன். அப்படியில்லையென்றால் பா.ஜ.க-விடம் ஒரு ராஜ்ய சபா சீட்டும், ஒரு மத்திய அமைச்சர் பதவியும் பெற வேண்டும். இதில் பிரேமலதாவுக்கு அதீத விருப்பம் என்றாலும் டெல்லி எந்த சிக்னலும் தரவில்லை” என்றனர்.
செய்தியாளர் சந்திப்பில் கூட்டணி குறித்த கேள்வி எழுந்தபோது, “விஜயகாந்த் மறைந்து ஒருமாத காலம்தான் ஆகியுள்ளது. ஆகவே நான் அரசியல் பேச விரும்பவில்லை. ஒருவார காலத்துக்கு பிறகு நான் அதுபற்றி பேசுவேன், உங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பேன்” என முடித்துக்கொண்டார் பிரேமலதா விஜயகாந்த்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
