மின்வாரிய துறையில் 55,000 காலி பணியிடங்கள் அதிகரிப்பு! தமிழக அரசின் நடவடிக்கை என்ன?

மின்வாரிய துறையில் 55,000 காலி பணியிடங்கள் அதிகரிப்பு! தமிழக அரசின் நடவடிக்கை என்ன?
மின்வாரிய துறையில் 55,000 காலி பணியிடங்கள் அதிகரிப்பு! தமிழக அரசின் நடவடிக்கை என்ன?

தமிழகத்தில் கடந்த மார்ச் மாத நிலவரப்படி மின் வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களின் எண்ணிக்கை 55,000 தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக மின் வாரியத்தில், தொழில்நுட்பம், கணக்கு, தணிக்கை, செயலகம், நிர்வாகம் என பல பிரிவுகள் உள்ளன. அவற்றில் உதவி பொறியாளர், கணக்கீட்டாளர், உள்ளிட்ட பதவிகளில் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை- 1.44 லட்சம் ஆகும்.

இந்தாண்டு மார்ச் மாத நிலவரப்படி மின் வாரியத்தில் 88,774 பேர் பணிபுரிகின்றனர். இதனால் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 55,295 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும் போது 2,001 பேர் ஓய்வு பெற்று உள்ளனர். அதோடு அதிக காலி பணியிடங்களால் மின்சாதன பழுதுகளை சரிசெய்வது போன்ற பணிகள் தாமதமாகின்றன.

இதன் காரணமாக காலியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு மின் வாரியத்திற்கு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதைபற்றி தொழிற்சங்கத்தினர் கூறுகையில் “காலியிடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ‘ஒப்பந்த ஊழியர்களை நியமிக்காமல், நிரந்தர ஊழியர்களை உடனே நியமிக்க வேண்டும். முதல் கட்டமாக, 5,000 ஊழியரை நியமிக்க, அரசு ஒப்புதல் தர வேண்டும்” என்றனர்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *