எடப்பாடி இப்படி பேசியதில் உள் அர்த்தம் இருக்கிறது. ஏனென்றால், கடந்த செப்டம்பர் மாதம் டெல்லியில் அமித் ஷாவுடன் இதேபோல ஒரு சந்திப்பு நடந்தது. அப்போது பன்னீர், தினகரன், சசிகலாவை இணைந்து செயல்பட்டால் நல்லது என்று அமித் ஷா கூறியிருந்தார். ஆனால், அப்போது ஒற்றைத் தலைமை தொடர்பான வழக்கு நடந்துக் கொண்டு இருந்ததால், தெளிவான பதிலை எடப்பாடியால் கூறமுடியவில்லை. ஆனால், இப்போது எல்லா வழக்குகளிலும் வெற்றிப் பெற்று பொதுச் செயலாளராக அமித் ஷாவை சந்தித்து இருக்கிறார் எடப்பாடி. குறிப்பாக, பா.ஜ.க கோரும் இரட்டை இலக்க சீட்டில் ஒன்று அ.ம.மு.க-வுக்கும், ஒன்று ஓ.பி.எஸ்-ஸுக்கும் கொடுக்க திட்டமிடுகிறார்கள்.


இதை எடப்பாடியிடம் நேரடியாக சொல்லாமல், எல்லாரும் ஒன்றியணைய வேண்டுமென்று மறைமுகமாக பா.ஜ.க வலியுறுத்து வருகிறது. அதற்கு ‘எண்ட் கார்டு’ போடும் விதமாகதான், அ.தி.மு.க-வில் எந்த பிளவும் இல்லை. பலமாக இருக்கிறோம் என்று ‘பஞ்ச்’ வைத்துவிட்டு வந்திருக்கிறார் எடப்பாடி.” என்றனர் விரிவாக..
முன்னதாக டெல்லியில் தான் தங்கிருந்த ஹோட்டலில் சட்ட வல்லுநர்களுடன் எடப்பாடி ஆலோசனை நடத்தி இருக்கிறார். அதன் விவரம் குறித்து விசாரித்தபோது, ” எடப்பாடிக்கு எதிராக நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு குற்றச்சாட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் வரவிருக்கிறது. அதுகுறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுடன் கிட்டதட்ட ஒருமணிநேரம் எடப்பாடி ஆலோசனை நடத்தினார்.” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com