”அனைத்து வகை கார்களையும் வாடகைக்கு பயன்படுத்தலாம்”..!! தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவிப்பு..!!

”அனைத்து வகை கார்களையும் வாடகைக்கு பயன்படுத்தலாம்”..!! தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவிப்பு..!!

இனி வரும் நாட்களில் அனைத்து வகை கார்களையும் வாடகைக்கு பயன்படுத்தலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழக போக்குவரத்து துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சொகுசு கார்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கார்களையும் பொதுப் போக்குவரத்து வாகனங்களாக (மஞ்சள் போர்டு) பதிவு செய்து இயக்க போக்குவரத்து துறை ஆணையர் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பிட்ட கார் வகைகளை மட்டுமே வாடகை கார்களாக பயன்படுத்த முடியும் என்ற விதி தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டிலும் அனைத்து வகையான கார்களையும் பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ஆடம்பர கார்களையும் வாடகைக்குப் பயன்படுத்தி பதிவு செய்யலாம் என போக்குவரத்து துறை தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தனிப்பட்ட மற்றும் டிராவல்ஸ் முறையிலும் அல்லது ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களை மையப்படுத்தியும் ஸ்விப்ட், மாருதி சுசுகி, டாடா இண்டிகோ போன்ற கார்கள் மஞ்சள் போர்டுடன் வாடகைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *