இதையடுத்து, “விதிவிலக்கு அளிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. அதன்படி எங்களுக்கு விலக்கு அளிக்கலாம்” என பட தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது. இதற்கு, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் தான் விலக்கு அளிக்க முடியும். சாதாரண நாட்களில் அளிக்க முடியாது” என அரசு தரப்பு பதில் அளித்தது. மேலும், “இடைவெளி நேரத்தை குறைத்தை 5 காட்சிகள் திரையிட முடியுமா? என ஆலோசித்து சொல்கிறோம்” எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
“அவ்வாறு செய்வதாக இருந்தால் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது” என்ற நீதிபதி, எவ்வளவு போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். என்பதை எல்லாம் நினைத்து பார்க்க வேண்டும்” என்றார்.
அப்போது, “லியோ படம் 2.45 நிமிடங்கள் நீளம் என தெரிந்திருந்தால் 5 காட்சிகளுக்கு அனுமதி அளித்திருக்க மாட்டோம்” என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
“இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்தையும் ஆராய்ந்து அனுமதி அளித்ததாக கூறியிருக்கிறீர்கள். ஆனால் இயந்திர தனமாக அனுமதி அளித்திருக்கிறீர்கள்” என நீதிபதி வினவினார்.


தொடர்ந்து, “4 மணி ரசிகர்கள் காட்சிக்கு தான் அனுமதி கேட்கிறோம்” பட தயாரிப்பு நிறுவன தரப்பு கூற, அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “அனைத்து காட்சிகளும் ரசிகர்களுக்காகதானே திரையிடப்படுகிறது” என கூறியதும் நீதிமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, லியோ படம் வெளியாகும் நாளில் 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்க முடியாது என உத்தரவிட்டார்.
காலை 9 மணி காட்சிக்கு பதில் 7 மணி முதல் அனுமதி கோரி விண்ணப்பிக்க பட தயாரிப்பு நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும், தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை பரிசீலித்து நாளை மதியத்துக்குள் உத்தரவு பிறப்பிக்கவும் அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com