இந்தி திணிப்பு என்பது பா.ஜ.க-வின் கொள்கையல்ல. மும்மொழி கொள்கைதான் எங்களின் ஆலோசனை. மூன்றாவது மொழி இந்திதான் படிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால், இந்தி பேசாததால்தான் நமது மாநிலத்துக்கு முதலீட்டாளர்களின் வருகை குறைந்திருக்கிறது. உங்கள் விருப்பப்படி படித்துக்கொள்ளுங்கள். அதனால், விஜய் சேதுபதி சொன்ன கருத்து அவரது தனிப்பட்ட கருத்து.
வெள்ள நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசு கேட்டிருப்பது மிகப் பெரியத் தொகை. அதனால், மத்திய அரசு ஆரம்பக்கட்டப் பணிக்கான தொகையை மட்டும் விடுவித்திருக்கிறது. மீதப்பணத்தை விரைவில் மத்திய அரசு கொடுக்கும்.
ராகுல் காந்தியின் யாத்திரையை பாராட்டுகிறோம். அதே நேரம், காங்கிரஸிடம் சரியான நோக்கமில்லை. அப்படி இருந்திருந்தால், கடந்த தேர்தலில் அவர்கள் வென்றிருக்கலாம். ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் அல்ல. அவருக்கும் எந்த நோக்கமும், திட்டமும் இல்லை.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் அரசியல் பலத்தை பயன்படுத்தி தனக்கான வெளிச்சத்தை தக்க வைத்துக்கொள்கிறார். செயல்பாடுகளை கடந்து முக்கியத்துவமற்றவைக்கு அதிகம் செலவு செய்கிறார்.
விஜயகாந்த் மரணம் குறித்து பிரதமர் மோடி இரங்கல் குறிப்பு எழுதியது விஜயகாந்தின் மீதான பிரியத்தின் காரணமாகதானே தவிர அதில் எந்த அரசியலும் இல்லை. தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடு அனைத்தும் பிரதமர் மோடிக்காகதான் வந்திருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com