இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல்.ஈஸ்வரப்பன் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “ராணிப்பேட்டை மாவட்டத்திற்காக ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதை எந்த தொகுதிக்கு வழங்குவது என்பது குறித்த மாவட்ட கூட்டத்தில் பல்வேறு இடங்களுக்கான கோரிக்கைகள் வந்தது. எனது தொகுதி உட்பட. இருப்பினும் இந்த முறை ஆற்காடு தொகுதிக்குட்பட்ட காவனூர் ஊராட்சிக்கு தான் தேவை அதிகம் இருப்பதால், இது அவர்களுக்குத்தான் வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
மருத்துவமனை கட்ட போதிய இடம் இல்லாததால் 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிதி திரட்டப்பட்டு,1 ஏக்கர் பரப்பளவு இடம் வாங்கப்பட்டு, 1 கோடி செலவில் ஆரம்ப சுகாதார நிலையம் அமையவுள்ளது. இதில் காவனூர் ஊராட்சி மட்டுமல்லாமல், சுற்றியுள்ள நான்கு ஊராட்சிகளை சேர்ந்த இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் பயனடைவார்கள்” எனத் தெரிவித்தார். பல ஆண்டுகளாக வைக்கப்பட்டு வந்த கோரிக்கையை ஏற்று அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பது குறித்து மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com