ஏற்கெனவே `துருப்பிடித்தும், உடைந்தும் இருக்கும் சைக்கிள்களை பள்ளி மாணவர்களுக்கு நாங்கள் வழங்க மாட்டோம்’ என காரைக்காலில் சில எம்.எல்.ஏக்கள், அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தனர். சைக்கிள்கள் வாங்குவது குறித்து பெறப்பட்ட டெண்டரில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கோஹினூர் என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, அதன் மூலமே சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த சைக்கிள்கள், இரண்டே மாதத்தில் முழுமையாக துருப்பிடித்து, உபயோகப்படுத்த முடியாத அளவுக்கு தரமற்று கிடக்கிறது. இந்த சைக்கிள்களைப் பெற்ற மாணவர்கள், 1,000 ரூபாய்க்கும், 1,500 ரூபாய்க்கும் பழைய இரும்புகள் வாங்கும் கடைகளில் வேறு வழியில்லாமல் விற்றுள்ளனர். தரமற்ற இலவச அரிசியை உபயோகப்படுத்த முடியாமல் எப்படி மக்கள் குறைந்த விலைக்கு விற்கிறார்களோ, அப்படித்தான் இந்த தரமற்ற சைக்கிள்களின் நிலையும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிள்கள், தரமானதா என்பதை எந்த அரசு அதிகாரியாவது ஆய்வு செய்தார்களா? சுமார் 5 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட்டுள்ள சைக்கிள்கள் உபயோகப்படுத்த முடியாமல் கிடப்பதற்கு பொறுப்பேற்கும் அதிகாரி யார்? அரசு துறைகளில் இதுபோன்ற தவறுகள் நடக்கும் போது, உரிய நடவடிக்கைகளை எடுப்பதில்லை. அதனால் `முறைகேடு’ என்பது புதுச்சேரி அரசின் அங்கீகரிக்கப்பட்ட அங்கமாக இருக்கிறது. இந்த இலவச சைக்கிள் வழங்கப்படும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக, நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு, துறை ரீதியிலான விசாரணை நடத்த வேண்டும். அதனடிப்படையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் முதல்வரிடம் மனு கொடுத்தேன்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
