அண்ணாமலை விவகாரத்தில் நிதானம் காட்டும் எடப்பாடி- டெல்லியில்

இந்த நிலையில், அ.தி.மு.க துணை பொதுச்செயலாளர்கள் நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக சீனியர் அமைப்புச் செயலாளர் ஒருவரிடம் பேசினோம்.

“அண்ணாமலை விவகாரத்தை எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எடப்பாடி கையாளவில்லை. மிகவும் நிதானமாகத்தான் அடியெடுத்து வைக்கிறார். அண்ணாமலையின் நடவடிக்கை குறித்து டெல்லி தலைமையிடம் பல முறை புகாராகச் சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை. அண்ணாமலையில் இந்த சர்ச்சை நடவடிக்கையெல்லாம் டெல்லியின் அறிவுறுத்தல் இல்லாமல் நடைபெற வாய்ப்பே இல்லையென்று எடப்பாடி திடமாக நம்புகிறார். அதனால், டெல்லி தலைமை நெருக்கமாக இருந்தும், கூட்டணி இல்லை என்று அறிவித்தார். இதை டெல்லி பா.ஜ.க நிச்சயம் எதிர்பார்த்திருக்காது.

அமித் ஷாவைச் சந்தித்த அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி (கோப்புப் படம்)அமித் ஷாவைச் சந்தித்த அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி (கோப்புப் படம்)

அமித் ஷாவைச் சந்தித்த அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி (கோப்புப் படம்)

அதன்படி, இந்த அறிவிப்பு வெளியான செப்.,18-ம் தேதி இரவே டெல்லியிலிருந்து எடப்பாடிக்கு அழைப்பு வந்தது. ஆனால், அவர் அதை எடுக்கவில்லை. இதனால், வேலுமணிக்கு அழைப்பு வந்ததையெடுத்து, அது குறித்து அன்று இரவே சேலம் வீட்டில் வைத்து ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்துதான் பா.ஜ.க குறித்து யாரும் பேசவேண்டாம் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும், அண்ணாமலையின் பேச்சு அடங்கவில்லை.

நத்தம் விசுவநாதன்,  கே.பி.முனுசாமிநத்தம் விசுவநாதன்,  கே.பி.முனுசாமி

நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி

இதனால், இந்த விவகாரம் தொடர்பாகப் பேச டெல்லிக்கு வரவேண்டுமென்று அழைப்பு வந்தது. அதன்படி, எடப்பாடியின் தரப்பாக துணை பொதுச்செயலாளர்கள் நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி ஆகியோர் செல்ல ஆயத்தமாகினர்.

சி.வி.சண்முகம்சி.வி.சண்முகம்

சி.வி.சண்முகம்
தே.சிலம்பரசன்

இந்த தகவல் வெளியே தெரிந்தால் தேவையில்லாத சர்ச்சையாகிவிடும் என்பதால், சென்னையிலிருந்து டெல்லிக்குச் செல்லாமல், கொச்சிக்குச் சென்று அங்கிருந்து டெல்லி பறந்திருக்கிறார்கள். நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பின்னர், சி.வி.சண்முகம் டெல்லியிலேயே இருந்துகொண்டார். அதன்படி, அ.தி.மு.க தலைவர்கள் இன்றிரவு 9 மணியளவில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்கவிருக்கின்றனர். இந்தச் சந்திப்பின்போது பா.ஜ.க மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனும் உடன் இருப்பார் எனக் கூறப்படுகிறது. சந்திப்பின்போது, கூட்டணி குறித்தும், அண்ணாமலை குறித்தும்தான் முழுக்க முழுக்க பேசப்படவிருக்கிறது” என்றார் விரிவாக.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *