இதுகுறித்து தி.மு.க செய்தி தொடர்பு குழுவின் துணைத் தலைவர் பி.டி.அரசகுமாரிடம் கேட்டபோது, “அண்ணா, திராவிடம் பெயர் தாக்கிய கட்சிக்கு எந்த ஒரு தகுதியுமே இல்லாமல் காலத்தின் சூழலால் பொதுச் செயலாளர் ஆகிவிட்டார் எடப்பாடி. பெரியார், அண்ணாவின் கொள்கையை உள்வாங்கியதால்தான், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை எம்.ஜி.ஆர் தொடங்கினார். அதுவும் எடப்பாடிக்கு தெரியாது என்றுதான் நினைக்கிறேன். ஆரியம், திராவிடம் என்றால் தமிழ்நாட்டில் பெரும்பான்மையினருக்கு தெரியும்.

திராவிடமென்றால் சமூகநீதி என்று இதுகூட தெரியாத எடப்பாடி, முதல்வராக இருந்திருக்கிறார் என்பது வெட்கக்கேடானது. பா.ஜ.க-வுடன் கூட்டணி முறிவு என்று இப்போது நாடகமாடும் எடப்பாடிக்கு, உண்மையில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., ஆளுநருக்கு எதிராக பேச துணிச்சல் இல்லை. அவர்களின் பகையை எடப்பாடியால் தாங்கமுடியாது. குட்கா உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஆளுநர்தான் அதிமுகவை பாதுகாத்து வருகிறார். அதனால்தான், அவர்களுக்கு எதிராக பேசாமல், பழுப்பலாக எதையாவது பேசுகிறார். இது கண்டனத்துக்குரியது” என்றார் காட்டமாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
