இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் எந்தவொரு தகவலாக இருந்தாலும், உடனுக்குடன் சமூக வலைதளங்களில் வேகமாகப் பதிவிடப்படுகின்றன. இவ்வாறு வேகமாகப் பகிரப்படும் செய்திகள் உண்மையானவையா… பொய்யானவையா என்று தெரியாமலேயே மக்களிடத்தில் பரவி, சில நேரங்களில் வெறுப்பு பிரசாரங்களுக்கு அவை அடித்தளமாகின்றன. உதாரணத்துக்கு, வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்குதலுக்குள்ளாவதாக சமூக வலைதளங்களில் பரவிய போலி வீடியோக்களைக் கூறலாம்.


இத்தகைய சூழலில்தான், தமிழ்நாடு அரசு தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராயும்விதமாக, உண்மை சரிபார்ப்புக் குழு ஒன்று அமைக்கப்படுவதாகவும், அந்தக் குழுவில் 80 பேர் இடம்பெற்றிருப்பார்கள் என்றும் சமீபத்தில் அரசாணை ஒன்று வெளியானது. இன்னொருபக்கம், `YOU TURN” யூடியூப் சேனலின் ஆசிரியர் ஐயன் கார்த்திகேயன், அந்த சேனலின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.
நன்றி
Publisher: www.vikatan.com