சூரியனை ஆய்வு செய்ய, செப்டம்பர்-2ல் விண்ணில் ஏவப்படுகிறது “ஆதித்தியா எல்1” விண்கலம்…!

சந்திராயன் 3 திட்டம் வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்தடுத்து பல விண்கலங்களை இஸ்ரோ அனுப்ப உள்ளது. அதில் முதற்கட்டமாக சூரியனை அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்து ஆய்வு செய்ய “ஆதித்தியா எல்1” விண்கலம் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்தின் இயக்குனர் நிலேஷ் எம். தேசாய் தெரிவித்துள்ளார். பூமியில் இருந்து 15லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருந்தவாறு சூரியனின் ஒளிவட்டம், சூரிய புயல்கள் உள்ளிட்டவை குறித்து ஆதித்திய எல்1 விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது.

இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்ய உள்ளது இதுவே முதன்முறை. மேலும் இந்த ஆதித்தியா எல்1 விண்கலம் முழுக்க முழுக்க இந்தியர்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்பது இதன் தனித்துவம். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் சூரியன் தொடர்பான ஆய்வுப்பணிகளை மெற்கொண்டுள்ளன. இதன் மூலம் சூரியனை ஆய்வு செய்யும் நான்காவது நாடாக இந்தியா மாறும்.

சூரியனை ஆய்வு செய்ய என கரணம் :
சூரியனின் மேற்பரப்பில் மிக அதிக வெப்பநிலை உள்ளது. அதன் மேற்பரப்பில் இருக்கும் பிளாஸ்மா வெடிப்புகள் வெப்பநிலைக்கு காரணம். பிளாஸ்மாவின் வெடிப்பு காரணமாக, மில்லியன் கணக்கான டன் பிளாஸ்மா விண்வெளியில் பரவுகிறது. இது கரோனல் மாஸ் எஜெக்ஷன் (CME) என்று அழைக்கப்படுகிறது. இது ஒளியின் வேகத்தில் பிரபஞ்சம் முழுவதும் பரவுகிறது. பல நேரங்களில் CME பூமியை நோக்கி வரும், ஆனால் பொதுவாக பூமியின் காந்தப்புலத்தால் பூமியை அடையாது. ஆனால் பல முறை CME பூமியின் வெளிப்புற அடுக்கை ஊடுருவி பூமியின் வளிமண்டலத்தில் ஊடுருவுகிறது.

சூரியனின் கரோனல் மாஸ் எஜெக்ஷன் பூமியை நோக்கி வரும்போது, ​​பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றி வரும் செயற்கைக்கோளுக்கு அதிக சேதம் ஏற்படுகிறது. பூமியிலும், குறுகிய இணைய தொடர்பு தடைபடுகின்றது. இதனை ஒட்டிய பணிகளை செய்ய மிஷன் ஆதித்யா எல்-1 சூரியனுக்கு அருகில் அனுப்பப்படுகிறது. சூரியனில் இருந்து வரும் கரோனல் மாஸ் எஜக்ஷன் மற்றும் அதன் தீவிரத்தை சரியான நேரத்தில் மதிப்பிடுவதை இது நோக்கமாக கொண்டுள்ளது. இதனுடன், பல வித ஆராய்ச்சியிப் பணிகளின் பார்வையில் இருந்தும் இந்த பணித்திட்டம் பல நன்மைகளைக் கொண்டுள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *